தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் சமந்தா (Samantha) திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடித்து வந்தார். யாரு கண்ணு பட்டதோ தெரியவில்லை.. அவரது திருமண வாழ்க்கையில் சில பிரச்சனைகள் ஏற்பட்டு கணவரை விவாகரத்து செய்து விட்டார் சமந்தா. இது சமந்தாவின் ரசிகர்களை மிகவும் கஷ்டப்படுத்தியது.
இன்னும் சிலர், உங்களுகுக்குள்ள என்ன தான் பிரச்சனை.. கோடி கோடியா காசு இருக்கும் போது என புலம்பி வந்தனர். ஆனால், அப்படி புலம்புபவர்களுக்கு ஒரு விஷயம் தெரியாது. “காசு இல்லாதவனுக்கு காசு மட்டும் தான் பிரச்சனை. காசு இருக்கவனுக்கு காசை தவிர எல்லாமே பிரச்சனை தான்” என்று.
சினிமா உலகை பொறுத்தவரை நடிகைகள் என்ன தான் பிரபலமானவர்களாக, திறமையானவர்களாக இருந்தாலும் அவர்களுக்கான சம்பளம் என்பது ஹீரோக்களை ஒப்பிடும் போது மிகவும் குறைவு.இதுகுறித்து தனது வருத்தத்தை பதிவு செய்துள்ளார் சமந்தா. அவர் கூறுகையில், ”நடிகைகளுக்கு சம்பளம் என்பது குறைவான அளவே தரப்படுகிறது.
விவாகரத்திற்கு பிறகு ஆன்மீக சுற்றுலா.. யோகா என்று பொழுதை கழித்து வந்த சமந்தா தற்போது தன்னுடைய உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்வதில் அதீத ஆர்வம் செலுத்தி வருகிறார்.
இவர் அடிக்கடிஉடற்பயிற்சி செய்து அந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது உடலோடு ஒட்டிய உடையில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பிவிட்டுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், நிஜமாவே ட்ரெஸ் போட்டு இருக்கீங்களா..? என்று கலாய்த்து வருகிறார்கள்.