பிரபல இளம் சீரியல் நடிகை சம்யுக்தா மற்றும் சீரியல் நடிகர் விஷ்ணுகாந்த் ஆகிய இருவரும் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டு திருமணமான ஒரே மாதத்தில் விவாகரத்து சர்ச்சைக்கு ஆளாகி இருக்கின்றனர்.
இதனை தொடர்ந்து இருவரும் ஒருவர் மாற்றி ஒருவர் தங்கள் மீது புகார் கூறி வருகின்றனர். விஷ்ணுகாந்த் பாலியல் ரீதியாக எப்படி எல்லாம் துன்புறுத்தினார் என்று கூச்சமே இல்லாமல் வெளிப்படையாக பேசினார் நடிகை சம்யுக்தா.
இதனால் கடுப்பான விஷ்ணுகாந்த் சம்யுக்தா மீது இருக்கக்கூடிய பிரச்சனைகள் என்ன என்பதை குறித்து ஆடியோ வடிவில் ஆதாரத்தோடு வெளியிட்டு இருந்தார். அந்த ஆடியோவின் மூலம் நடிகை சம்யுக்தா திருமணத்திற்கு முன்பே கன்னி கழிந்தவர் என்ற விஷயங்கள் இடம் பெற்று இருக்கின்றன.
இதனை சம்யுக்தாவின் அம்மாவே ஒப்புக் கொள்வது போன்ற ஆடியோக்களும் இருந்தது. இந்நிலையில், புது ஆடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது. இது மிகப்பெரிய பரபரப்பு கிளம்பி இருக்கிறது.
அதில் சம்யுக்தாவிடம் பேசும் ஒரு நபர் நீ ரவியுடன் தொடர்பில் இல்லை என்று கூறினாய். ரவி மோசமானவன் கெட்டவன் என எங்களிடம் கூறினாய் ஆனால் அதே நேரத்தில் ரவியுடன் நீ பேசிக்கொண்டிருக்கிறாய். நீ இல்லாமல் என்னால் இருக்க முடியாது. என அவனிடம் கூறி இருக்கிறாய்.
இது என்ன என்று கேட்கிறார். அதற்கு சம்யுக்தா சில விஷயங்களை என்னால் வெளிப்படையாக கூற முடியாது. உங்கள் அருகில் அப்போது நிறைய பேர் இருந்தார்கள் அதனால் தான் நான் அவனிடம் பேசுவதில் என கூறினேன் என கூறுகிறார்.
அதனை தொடர்ந்து நீ விஷ்ணுகாந்தியுடன் காதலில் இருக்கிறாய் என்று கூறி விட்டாய். ஆனால், அவனுடனும் நீ பேசிக் கொண்டிருக்கிறாய் இதற்கு என்ன காரணம் என கேட்கிறார்.
அதற்கு பதில் அளித்த சம்யுக்தா நான் சில விஷயங்களை கூற முடியாது. நான் விஷ்ணு-வை ஹோல்டில் வைத்திருந்தேன் என ஓப்பனாக பேசுகிறார். இதைக் கேட்ட மறுமுனையில் இருந்த நபர் என்து ஹோல்டில் வைத்திருந்தியா..? அப்படி என்றால் ஒரே நேரத்தில் இரண்டு பேரை காதலித்துக் கொண்டிருந்தாயா.,.?
யார் சரிப்பட்டு வருகிறார்களோ அவர்களை திருமணம் செய்து கொள்ளலாம் என்று யோசித்து கொண்டிருக்கிறாயா..? நீ என்ன வேண்டுமானாலும் செய்து கொண்டு போ.. ஆனால், ஒருவனை பற்றி தவறாக எங்களிடம் கூறிவிட்டு மறுபக்கம் அவனிடமே நீ காதல் செய்து கொண்டிருந்தால் இதற்கு என்ன அர்த்தம் என கேள்விகளால் துளைத்தெடுக்கிறார்.
ஆனால், ரவி என்னிடம் தப்பு பண்ணிட்டான். அதற்க்கான ஆதாரத்தை பெறுவதற்கு தான் அவனிடம் பேசிக்கொண்டிருந்தேன் என மழுப்பல் பதிலை கொடுத்துள்ளார்.