என் அம்மா தப்பு.. என்னோட அண்ணன்கள் குடிகாரர்கள்.. நடிகை சங்கீதா உருக்கம்..! – அதிர்ச்சி தகவல்கள்..!

பிரபல நடிகை சங்கீதா.. தன்னுடைய 13 வயதிலிருந்து சினிமாவில் பயணித்து வருகிறார். தமிழ் தெலுங்கு மலையாளம் சொல்லிட்ட தென்னிந்திய மொழிகளில் ஹீரோயின் ஆகவும் குணசத்திர வேடங்களிலும் துணை நடிகையாகவும் என பல்வேறு காலகட்டங்களில் தன்னுடைய இருப்பை உறுதிப்படுத்தும் விதமாக பயணித்துக் கொண்டிருக்கிறார்.

தற்பொழுதும் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இடையில் நடிகை சங்கீதாவின் அம்மா என்னை இவள் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டார்.. சாப்பாட்டுக்கு கூட வழியில்லை என்று பகீர் குற்றச்சாட்டு ஒன்றை வைத்து இருந்தார்.

இதனை அறிந்த ரசிகர்கள் பெற்று வளர்த்த தாயை எப்படி நீங்கள் இப்படி கண்டு கொள்ளாமல் விட்டீர்கள் என்று நடிகை சங்கீதாவுக்கு எதிரான கருத்துக்களை பதிவு செய்து வந்தனர்.

ஆனால் நடிகை சங்கீதா கொடுத்த விளக்கத்திற்கு பிறகு தான் இதனால் நடிகை சங்கீதா இப்படி செய்தார் என்ற உண்மை தெரிய வந்தது. அவர் கூறியதாவது இளம் வயதில் நான் சம்பாதித்த அனைத்து பணத்தையும் என்னுடைய அம்மா மற்றும் அண்ணனிடம் தான் கொடுப்பேன்.

அவர்கள் எதிர்காலத்திற்கு என எந்த ஒரு சேமிப்பையும் சேர்த்து வைக்காமல் சுகபோகமாக செலவு செய்து கொண்டு தேவையே இல்லாத பொருட்களை வாங்குவது பணத்தை பணமாக பார்க்காமல் தண்ணி போல செலவு செய்வது என இருந்தனர்.

என்னுடைய அண்ணன்கள் இருவரும் குடிகாரர்கள். என்னுடைய அம்மாவிற்கு சேமிப்பு என்றால் என்னவென்று தெரியாது. நான் சம்பாதித்த அனைத்து பணத்தையும் என் அம்மாவிடம் தான் கொடுத்தேன். ஆனால் அவர் பணத்தை சேமித்து வைக்காமல் தேவையில்லாத பொருட்களை வாங்குவது என சுகபோகமாக வாழ்ந்து கொண்டிருந்தார்.

தற்பொழுது எனக்கு திருமணம் ஆகிவிட்டது. எனக்கென குழந்தைகள் இருப்பது குடும்பம் இருக்கிறது. நானும் என் அம்மா போல செலவு செய்து கொண்டு இருந்தால் நிச்சயம் என்னுடைய எதிர்காலம் கேள்விக்குறியாகும் என்ற பயம் எனக்கு இருக்கிறது.

என் அம்மா சொல்லக்கூடிய குற்றச்சாட்டில் எந்த உண்மையும் கிடையாது. பணத்தின் அருமை என்ன என்று அவர்களுக்கு தெரியாது. அதனால்தான் அவர்களுக்கு நான் பணம் கொடுக்காமல் இருக்கிறேன்.

தொடர்ந்து அவர்களுக்கு நான் பணம் கொடுத்து கொண்டு இருந்தால் என்னுடைய வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும் என்று தனது பேட்டியில் பதிவு செய்திருக்கிறார்.

நடிகை சங்கீதாவின் இந்த பேட்டி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது மற்றும் இவருடைய அந்த பேச்சு இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Summary in English : Actress Sangeetha recently shared her story of why she stopped helping her mother financially. She is not the only one who had to make this difficult decision.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …