இப்படி தான் லேடி சூப்பர் ஸ்டார் ஆனார்..!- நயன்தாரா ரகசியத்தை போட்டு உடைத்த சரண்யா பொன்வண்ணன்..!

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக பயணித்து வருகின்றார். அதற்கான அங்கீகாரம் சில வருடங்களுக்கு முன்பு தான் கிடைத்தது.

ஆரம்பத்தில் சரியான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து இதற்கு முக்கியமான காரணம். நடிகை நயன்தாரா ஒரு கட்டத்தில் நல்ல கதையம்சம் கொண்ட கதாபாத்திரம் கொண்ட கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வந்தார்.

தற்போது தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நடிகையாக இருக்கும் நடிகை நயன்தாரா சமீபத்தில் தனது காதலர் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார்.

 

ஆரம்பத்தில் நடிகை நயன்தாரா எல்லாவற்றையும் நம்பிக் கொண்டு இருந்தாராம் வெளுத்ததெல்லாம் பால் என்று என்பது போல நடிகை நயன்தாரா விவரம் இல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் தான் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளானார். இந்நிலையில், நடிகை நயன்தாரா குறித்து பிரபல நடிகை சரண்யா பொன்வண்ணன் சமீபத்திய பேட்டி ஒன்றில் சில விஷயங்களை போட்டு உடைத்துள்ளார்.

அந்த வகையில் நெல்சன் இயக்கத்தில் வெளியான கோலமாவு கோகிலா என்ற திரைப்படத்தில் நடிகை நயன்தாராவுக்கு அம்மாவாக நடித்த போது தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

அவர் கூறியதாவது, நடிகை நயன்தாரா யாருடனாவது பேசாமல் இருந்தால் அவர் மிகவும் மோசமான ஆளாக இருப்பார் என்று அர்த்தம்.

நயன்தாரா தனக்கு உண்மையாக இருக்கக் கூடியவர் தன்னை யாராவது துன்புறுத்தினால் அவர்களிடம் வாக்குவாதம் செய்வது அல்லது தன்னுடைய பக்க நியாயத்தை எடுத்து வைக்க முயற்சிப்பது போன்ற விஷயங்களை நயன்தாரா அறவே செய்யமாட்டார்.

அவர்களை தன்னிடம் இருந்து ஒதுக்கி வைத்து விடுவார். சினிமாவில் இவ்வளவு உயரத்தில் இருக்கும் நயன்தாரா தனது பிரச்சினை கொடுக்கக்கூடிய நபர்களுக்கு கொடுக்க கூடிய அதிகபட்ச தண்டனை அவர்களை தவிர்த்து விடுவதுதான்.

பயன்படுத்துபவர்கள் தன்னைப்பற்றி தவறாக பேசுபவர்கள் பேசிக் கொண்டே தான் இருப்பார்கள் அவர்களை சமாளிப்பது அவர்களுக்கு என்னுடைய நியாயத்தை கூறிக் கொண்டிருப்பது என்னுடைய வேலை கிடையாது எனக்கு சினிமாவில் தலைக்கு மேல் வேலை இருக்கின்றது என்று கூலாக ஒதுங்கி விடுவார்.

ஆனால் நடிகை நயன்தாரா இந்த ஒரு குணத்தினால் தான் நடிகை நயன்தாரா சமீபகாலமாக பெரிய சர்ச்சையில் சிக்கியும் தற்போது லேடி சூப்பர் ஸ்டாராக நிலைத்து நிற்கிறார் என்று கூறியிருக்கிறார் நடிகை சரண்யா பொன்வண்ணன்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …