இது தான் நயன்தாராவின் குணம்..! – போட்டு உடைத்த சரண்யா பொன்வண்ணன்..!

இன்று அம்மா கேரக்டர்களில் அதிகமாக நடிப்பவர் சரண்யா பொன்வண்ணன்தான். ராம் படத்தில் ஜீவாவுக்கு அம்மாவாக நடித்தார். அதன்பின், கச்சேரி ஆரம்பம் படத்திலும் ஜீவாவுக்கு அவர்தான் அம்மா. விஜய் சேதுபதிக்கு தென்மேற்கு பருவக்காற்று படத்தில் சரண்யாதான் அம்மா. எம்டன் மகனில் பரத்துக்கு அம்மா இவர்தான். அடுத்து வேலையில்லா பட்டதாரி, கொடி படங்களில், தனுஷூக்கு அம்மாவாக நடித்தார். ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில், உதயநிதிக்கும் அம்மா இவர்தான். களவாணி படத்தில் விமல் அம்மா சரண்யா தான்.

சரண்யா பொன்வண்ணன்

இப்படி அம்மா நடிகையான மாறிப்போன சரண்யா, பொன்வண்ணன் மனைவியாவதற்கு முன்பு கதாநாயகியாக பல படங்களில் நடித்திருக்கிறார். மணிரத்னம் இயக்கத்தில், வேலுநாயக்கர் கேரக்டரில் உலக நாயகன் நடித்த நாயகன் படத்தில், கமலுக்கு ஜோடி சரண்யா தான். இதுதான் சரண்யாவுக்கு முதல் படம். அடுத்து, பிரபுவுடன் மனசுக்குள் மத்தாப்பூ படத்தில் நடித்திருந்தார்.

விருமன், எதற்கும் துணிந்தவன், எம்ஜிஆர் மகன், பூமி, மன்னர் வகையறா, கோலமாவு கோகிலா, மகளிர் மட்டும், 24, ரெமோ, நான் சிகப்பு மனிதன், குட்டிப்புலி, முத்துக்கு முத்தாக, யாவரும் நலம், திண்டுக்கல் சாரதி, பாண்டி, குருவி, வேல், கிரீடம், திருவிளையாடல் ஆரம்பம், தவமாய் தவமிருந்து என, பல வெற்றிப்படங்களில் அம்மா கேரக்டரில் சரண்யா பொன்வண்ணன்தான் ஹீரோவுக்கு அம்மா.

#image_title

அஜீத், விஜய், சசிக்குமார், சூர்யா, தனுஷ், பரத், சிவகார்த்திகயேன், விமல், விஜயசேதுபதி என பல கதாநாயகன்களுக்கு அம்மாவாக நடித்த சரண்யா பொன்வண்ணன், கோலமாவு கோகிலா படத்தில், நோயாளி தாயாக நயன்தாராவுக்கு நடித்திருப்பார். இதில் கிளைமேக்ஸ் காட்சியில், கோடிக்கணக்கான போதைப் பொருளை கடத்தும் வேனில், நோயாளியாக நடித்துக்கொண்டு அவர் படுத்திப்பதும், உண்மை தெரியாமல் ஏமாந்துவிட்டு அதன்பின்னர் யோகி பாபு அவர்களை அவரது ஸ்டைலில் கலாய்ப்பதும் சிறப்பாக இருந்தது.

முத்துக்கு முத்தாக படத்தில், இளவரசு – சரண்யா கணவன், மனைவியாக நடித்த படம். இந்த படத்தின் இறுதியில், மருமகள்களால் புறக்கணிக்கப்பட்ட இருவரும் கோழிக்கறியில் விஷம் கலந்து சாப்பிடும் காட்சி, அந்த படத்திலேயே மிகவும் உருக்கமான காட்சியாக அமைந்தது, குறிப்பிடத்தக்கது.

சரண்யா பொன்வண்ணன்

இவரது கணவர் பொன்வண்ணன், அவரும் ஒரு பிரபலமான நடிகர்தான். பருத்திவீரன் படத்தில், பிரியாமணி அப்பாவாக நடித்திருப்பாரே அவர்தான் பொன்வண்ணன். பல படங்களில் அவரும் நடித்திருக்கிறார். இப்போதும் நடித்துக்கொண்டும் இருக்கிறார்.தன்னுடன் நடித்த, நடிக்கிற மற்ற கலைஞர்களை பற்றிய தனது கருத்துகளை, அவர்களை பற்றிய உண்மைகளை வெளிப்படையாக பேசி விடுபவர் சரண்யா பொன்வண்ணன்.சமீபத்தில் அப்படி பேசிய சரண்யா பொன்வண்ணன், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை பற்றி சில விஷயங்களை கூறி இருக்கிறார்.

சரண்யா பொன்வண்ணன்

நயன்தாரா நேர்மையான குணம் கொண்டவர். ஒருவர் குணம் தவறாக இருந்தால், அவரிடம் நயன்தாரா பழக மாட்டார். உடனடியாக அவர்களிடம் இருந்து விலகி விடுவார். எப்போதுமே, பாசிட்டிவ் ஆக பேசுபவர். சிலம்பரசன், பிரபுதேவாவை காதலித்த நயன்தாராவுக்கு, கசப்பான அனுபவங்களே காதலில் கிடைத்தது. எனினும் விக்னேஷ் சிவனை அவர் காதலித்து, திருமணம் செய்திருக்கிறார்.

சரண்யா பொன்வண்ணன்

தொழிலிலும், உறவிலும் நேர்மையாக நடந்துக்கொள்ளும் நயன்தாரா, இப்போது தனது குழந்தைகளை பார்த்துக்கொள்வதில், பராமரிப்பதில் ஒரு தாயாக அதிக நேரத்தை செலவிட்டு வருகிறார், என்று கூறி இருக்கிறார். நயன்தாரா குறித்து, சரண்யா பொன்வண்ணன் கூறிய இந்த தகவல்கள், தற்போது வைரலாகி வருகின்றன.
மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு, தொடர்ந்து தமிழகம் இணையத்தை படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …