என்னோட இந்த உறுப்பில் உள்ள மச்சத்தை நீக்க ஆப்ரேஷன் பண்ண சொன்னாங்க.. ரகசியம் உடைத்த சரோஜா தேவி..!

கன்னடத்து பைங்கிளி, அபிநய சரஸ்வதி என்று பல அடைமொழிகளால் அன்போடு அழைக்கப்படும் நடிகை பி சரோஜாதேவி 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக விளங்கியவர்.

கர்நாடக மாநிலம் மைசூரில் பிறந்த இவரது உண்மையான பெயர் ராதா தேவி கௌடா. இவர் மக்கள் திலகம் எம்ஜிஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், காதல் மன்னன் ஜெமினி ஆகியோரோடு இணைந்து பல படங்களில் நடித்திருக்கிறார்.

நடிகை சரோஜாதேவி..

நடிகை சரோஜாதேவியின் நடிப்பை பார்ப்பதற்கு என்று ஒரு ரசிகர் கூட்டமே அன்று இருந்தது என்று கூறலாம். சூப்பர் ஸ்டார் நடிகரை விட அதிக சம்பளம் வாங்கிய நடிகையாக நடிகை சரோஜாதேவி திகழ்ந்தார்.

இவர் மகாகவி காளிதாஸ் என்ற கன்னட படத்தில் 1955 ஆம் ஆண்டு கதாநாயகியாக அறிமுகமானார். இவரது முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்ததை அடுத்து இவருக்கு தேசிய விருதும் கிடைத்தது.

தமிழில் இவர் நடிப்பில் வெளி வந்த நாடோடி மன்னன் திரைப்படம் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்தது. அது போலவே கல்யாணப்பரிசு படத்தில் 1959 இல் நடித்திருந்தார் இந்த படமும் இவரை ரசிகர்கள் விரும்பும் நாயகியாக மாற்றியது.

மச்சத்தை நீக்க ஆப்பரேஷன்..

இவர் முதல் படமான மகாகவி காளிதாஸ் நடிக்கும் போது இவரை போட்டோ எடுத்திருக்கிறார்கள். அப்போது இவர் கண்ணில் இருந்த மச்சத்தை நீக்க ஆப்பரேஷன் செய்ய வேண்டும் என்று சொல்லி பயமுறுத்தி விட்டார்கள்.

இதைக் கேட்ட உடனே பயத்தால் அழுததோடு மட்டுமல்லாமல் தன் அம்மாவிடமும் சொல்லி இந்த படம் நமக்கு தேவையில்லை சென்றுவிடலாம் என்று கூறினார். ஆனால் இவரின் அம்மா இவரை சமாதானப்படுத்தி இயக்குனரிடம் இது பற்றி கேட்டிருக்கிறார்.

அதற்கு அந்த இயக்குனர் இவர் குருவாக நினைக்கும் சீத்தா ராம் சாஸ்திரி என்பவரிடம் இந்த ஆப்ரேஷன் பற்றி கேட்டிருக்கிறார். இதனைக் கேட்டவுடன் அந்த இயக்குனர் கடுமையாகமல் சிரிக்க ஆரம்பித்து விட்டார். அத்தோடு உங்கள் மகளை கேலி செய்யத்தான் உதவி இயக்குனர் இது போன்று பேசியிருக்கிறார் என கூறினார்.

நடந்தது என்ன..

இதனை அடுத்து கண்ணில் இருக்கும் இந்த மச்சத்தால் நான் மிகப்பெரிய ஸ்டாராக வருவேன் என்று கூறியதோடு மட்டுமல்லாமல் மிகச்சிறந்த நடிகையாகவும் திகழ்வேன் என்று கூறினார்.
அப்படி கூறும் போது நான் அதையெல்லாம் நம்பவில்லை. இந்த படத்தை முடித்து கொடுத்துவிட்டு ஊர் போய் சேர்ந்தால் போதும் என்று தான் நான் நினைத்தேன்.

எனினும் முதல் படத்திற்கே எனக்கு தேசிய விருது கிடைத்ததை அடுத்து அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் வந்து சேர நான் படங்களில் தொடர்ந்து நடிக்க அவர் கூறியது போல ஒரு நல்ல அந்தஸ்தில் மிகச்சிறந்த நடிகையாக உருவெடுத்து விட்டேன் என கன்னடத்து பைங்கிளி தனது கொஞ்சி மொழியில் பேசி இருக்கிறார்.

இதனை அறிந்து கொண்ட ரசிகர்கள் அனைவரும் அடடா உங்களோடு அந்த உறுப்பில் உள்ள மச்சத்தை நீக்க ஆபரேஷன் பண்ண சொன்னார்களா? என்று கேட்டதோடு தற்போது ரகசியத்தை உடைத்து விட்ட சரோஜா தேவியை புகழ்ந்து தள்ளி இருக்கிறார்கள்.

எல்லா படங்களிலுமே இவர் அடுத்த ஒடுக்கமாக அவர் அம்மாவுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றும் படி ஒரு குறிப்பிட்ட டிரஸ் கோடுல் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. எந்த ஒரு திரைப்படத்திலும் அதிகளவு கவர்ச்சியை காட்டியோ, உடையை குறைத்தோ நடிக்கவில்லை.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …