தொடர்ச்சியாக 4 படங்கள் பட்டையை கிளப்பும் சசிகுமார்..!

சுப்ரமணியபுரம் திரைப்படத்தின் மூலம் நடிகராகவும் இயக்குனராகவும் அறிமுகமானவர் சசிகுமார். இவர் இயக்குனர் அமீர் மற்றும் பாலா ஆகியோர் உடன் ஆரம்ப காலகட்டத்தில் உதவி இயக்குனராக பணியாற்றினார்.

அதற்கு பிறகு தொடர்ந்து பல படங்களில் நடித்தார்.அதில் சுந்தரபாண்டியன் படம் சக்கை போடு போட்டது. இதற்குபிறகு குட்டிப்புலி,நாடோடிகள்,வெற்றிவேல் போன்ற படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது இதற்குப் பிறகு நடித்த சில படங்கள் சசிகுமார் நினைத்த அளவு வெற்றி பெறாததால் அவருடைய மார்க்கெட் சரிய தொடங்கியது.

சில மாதங்களுக்கு முன்பு வெளியான காரி திரைப்படமும் அந்த அளவிற்கு பெரிதாக பேசப்படவில்லை.இந்த நிலையில்தான் தற்பொழுது வெளியாகி உள்ள அயோத்தி திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை விமர்சன ரீதியாக பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

மேலும் வசூல் ரீதியாகவும் வெற்றி அடைந்துள்ளது. இந்த வெற்றிக்கு பிறகு சசிகுமாருக்கு இப்பொழுது நான்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைத்துள்ளன. இதில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிக்கப் போவதாகவும் சொல்லப்படுகிறது. இதில் பகைவனுக்கு அருள்வாய் என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஆரம்பித்துள்ளது.

இந்த திரைப்படத்தில் சின்னத்திரை நயன்தாரா என அழைக்கப்படும் வாணிபூஜன் மற்றும் பிந்து மாதவி ஆகியோர் சசிகுமாருடன் நடித்து வருகிறார்கள். அதே வேளையில் சரத்குமாருடன் சேர்ந்து நானா என்ற திரைப் படத்திலும் இவர் நடித்து வருகிறார்.

அதற்குப் பிறகு வித்தியாசமான தோற்றத்தில் பரமகுரு படத்திலும் நடிக்க தற்போது கமிட்டாகியுள்ளார் நந்தன் படத்திலும், மேலும் ஹரி இயக்கும் நந்தன் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த வெற்றிக்குப் பிறகு கிடைத்துள்ள இந்த படங்கள் சசிகுமார் தற்பொழுது மகிழ்ச்சி அடைந்துள்ளார் மேலும் ரசிகர்கள் பழைய சசிகுமார் திரும்பி விட்டார் எனவும் சமூகவலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்கள். இதுபோல பல சுவாரசியமான சினிமா செய்திகளை உடனுக்குடன் படிக்க நம்ம தமிழகம் இணையதள பக்கத்தை தொடர்ந்து படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …