“ஐட்டம் பாட்டுக்கு ஆட்டம் போட்ட சாயிஷா…” – “ஆ” என வாய்பிளந்து வேடிக்கை பார்த்த கணவர் ஆர்யா..!

பத்துதல படத்துக்காக, மனைவி சாயிஷாவின் குத்தாட்டத்தை, அவரது கணவர் ஆர்யா, வாய்பிளந்து வேடிக்கை பார்த்த சம்பவம், சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

ஜெயம் ரவி நடித்த ‘வனமகன்’ படம் மூலம், தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சாயிஷா. அதன்பின், ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில், கார்த்திக்கு ஜோடியாக நடித்தார். கடந்த 2018ல் ஆர்யாவுடன் ‘கஜினிகாந்த்’ படத்தில், சாயிஷா ஜோடியாக நடித்தார்.

இருவருக்கும் அப்போது காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்துகொண்டனர். அழகான பெண் குழந்தையும் இவர்களுக்கு உள்ளது.

இந்நிலையில், நீண்ட இடைவெளிக்கு பின், நடிகை சாயிஷா, சிம்பு நடிப்பில் வெளிவர உள்ள ‘பத்துதல’ படத்தில், ராவடி என்ற அயிட்டம் பாடலுக்கு, கவுதம் கார்த்திக்குடன் பயங்கரமாக குத்தாட்டம் போட்டு, தமிழ் சினிமாவுக்கு, ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.

நடிகை சாயிஷா அழகான தோற்றம் கொண்டவர். சிறந்த நடனக் கலைஞர். அப்படி இருந்தும், அயிட்டம் சாங்குக்கு குத்தாட்டம் போட்டிருப்பது, ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

அதுவும், அந்த குத்தாட்டத்தை ஆர்யாவே, அருகில் இருந்து ரசித்திருப்பதும், இன்னும் விசித்திரமாக பலருக்கு இருந்துள்ளது.

ஆனால், இதுபற்றி ஆர்யா, சாயிஷா இருவருமே அலட்டிக்கொண்டதாக தெரியவில்லை. ஒருவேளை, புஷ்பா படத்துக்காக சமந்தா குத்தாட்டம் போட்டதற்கு, கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கினார்.

அதைப்போல, சாயிஷாவும் கோடிக்கணக்கில் இந்த அயிட்டம் பாட்டுக்கு சம்பளம் வாங்கியிருப்பாரோ, என விசாரித்தால், சாயிஷா வாங்கியது வெறும் 40 லட்சம் ரூபாய் மட்டும்தானாம்.

சிறுவயதில் இருந்தே, நடனம் எனக்கு மிகவும் பிடித்த விஷயம். அதைத்தான் செய்தேன். மற்றபடி, இதுபற்றி தயக்கம் கொள்ள எதுவுமில்லை என்று கூறினாராம் சாயிஷா.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …