என்ன சொல்றீங்க..? – நடிகர் கமல்ஹாசன் முதல் மனைவி குறித்த பலரும் அறிந்திடாத அதிர்ச்சி தகவல்..!

நடிகர் கமல்ஹாசன் அவர்களின் முதல் மனைவி வாணி கணபதி குறித்து பலரும் அறிந்திராத சில தகவல்களை நாம் இங்கே பார்க்கப் போகிறோம். நடிகர் கமலஹாசன் முதலில் வாணி கணபதி என்பவரை கடந்த 1978ஆம் திருமணம் செய்து 1988-ம்ஆண்டு விவாகரத்து செய்தார்.

அதன் பிறகு அதே ஆண்டு நடிகை சரிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நடிகர் கமல்ஹாசன். கடந்த 1975 ஆம் ஆண்டு இயக்குனர் ஏபி நாகராஜன் இயக்கத்தில் வெளியான மேல்நாட்டு மருமகள் என்ற திரைப் படத்தில் ஹீரோவாக கமல்ஹாசன் நடித்திருந்தார்.

இந்த படத்தில் ஒரே ஒரு பாடலில் நடனம் ஆடும் நடிகையாக தோன்றினார் நடிகை வாணி கணபதி. அப்பொழுது அவருடன் காதலில் விழுந்த நடிகர் கமல்ஹாசன் அவரை மூன்று ஆண்டுகள் காதலித்து வந்தார். அதன் பிறகு அவரையே திருமணம் செய்து கொண்டார்.

கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் தன்னுடைய முதல் மனைவியுடன் வாழ்ந்த நடிகர் கமல்ஹாசன் திடீரென அவரை விவாகரத்து செய்தது அப்போது மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட ஒரு விஷயம்.

இதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும் கூட அவரால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது என்ற காரணம் தான் இவரை விவாகரத்து முடிவுக்கு தள்ளியது என்று பத்திரிகைகள் பலவற்றிலும் எழுதப்பட்டது.

இதில் இன்னும் அதிர்ச்சிக்குரிய விஷயம் என்னவென்றால் வாணி கணபதி கர்ப்பமாக இருந்தபோது அவர் கர்ப்பமாக இருக்கிறார் என்று தெரிந்தும் கூட அவரை மிகபெரிய ராட்டினத்தில் நடிகர் கமலஹாசன் சுற்ற வைத்தார்.

அதன்பிறகு அவருடைய கரு கலைந்துவிட்டது. இதை வேண்டுமென்றே தான் நடிகர் கமல்ஹாசன் செய்தார் என்று பல பத்திரிகைகளில் கவிதை வடிவிலும் கிசுகிசுவில் உள்ள தகவல்கள் பரப்பப்பட்டன.

ஆனால் இதுகுறித்து நடிகர் கமல்ஹாசன் அல்லது வாணி கணபதி ஆகியோர் வாய் திறந்ததே கிடையாது. சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய கமல்ஹாசன் குறித்து அவருடைய முதல் மனைவி வாணி கணபதி சில விசயங்களை பகிர்ந்துள்ளார்.

நான் அவரை விவாகரத்து செய்து 34 ஆண்டுகள் கடந்து விட்டது. இந்த 34 ஆண்டுகளில் இதுவரை அவரை நேரடையாக நான் பார்த்தது கிடையாது. ஒரே ஒருமுறை மட்டும் நான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு வெளியே அவரை எதேச்சையாக பார்க்க நேர்ந்தது .

அவரைப் பார்ப்பதற்கு கூட நான் விரும்பவில்லை. அது அவர்தானா என்று கூட எனக்கு தெரியவில்லை. என் அருகில் இருந்தவரிடம் அது அவர் என்று பார்த்து சொல்லுங்கள் என்று கேட்டேன். அவர்கள் பார்த்துவிட்டு ஆம் அவர்தான் என்றார்கள்.

அதன் பிறகு நான் அந்த பக்கமே திரும்பவில்லை. நடிகர் கமல்ஹாசன் குறித்து பத்திரிகைகளில் பல்வேறு தகவல்கள் வருவதை நான் பார்த்திருக்கிறேன். அவரைப் பற்றி ஒரு வரியில் சொல்ல வேண்டுமென்றால் அவர் ஒரு புத்தகத்தின் முதல் பக்கம் மற்றும் கடைசி பக்கத்தை மட்டும் படித்துவிட்டு தன்னுடைய விளக்கத்தைக் கொடுக்க கூடியவர். அந்த அளவுக்கு திறமை படைத்தவர் அவர்.

இது ஒருவகையில் திறமை என்றாலும் கூட.. ஒரு புத்தகத்தின் முதல் பக்கமும் கடைசி பக்கமும் அந்தப் புத்தகத்தில் தன்மையை 100% சொல்லி விடுமாஎ..? என்றால் அங்கே மிகப் பெரிய கேள்விக்குறி இருக்கும். அந்த கேள்விக்குறிக்கு பதில் அந்த புத்தகத்தை முழுமையாக படிப்பது தான் தவிர வேறு எதுவுமே இருக்க முடியாது.

எனவே, இது எங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை. இதுவரை என்னைப் பற்றி அவரும்.. அவரைப் பற்றி நானும் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை கூறிக்கொண்டு எங்கள் மீது நாங்களே சேற்றை பூசிக் கொள்ள விரும்பவில்லை.. விரும்பவும் மாட்டோம்.. எனவே என்னுடைய எங்கள் விவாகரத்து குறித்து இதற்கு மேல் என்னால் எதுவும் சொல்ல முடியாது என்று பதிலளித்திருக்கிறார். இந்த தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கின்றது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …