பரதேசி தன்சிகா இப்போ எப்படி இருக்கிறார் பாருங்க

தமிழில் நன்கு அறியப்பட்ட நடிகையாக இருந்து வருபவர் நடிகை தன்சிகா. இவர் தஞ்சாவூர் மாவட்டத்தில் 1989 நவம்பர் 20ஆம் தேதி பிறந்தவர் இவரது தாய் மொழி தமிழாகும். நன்கு தமிழ் பேச தெரிந்த நடிகைகளில் இவரும் ஒருவர். இவர் தமிழ் திரையுலகத்தில் வெளியான திருடி என்ற திரைப்படத்தின் மூலம் முதல் முதலில் திரைத்துறையில் அறிமுகமானார்.

சென்னையில் உள்ள பிரபல ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் தனது பட்டப் படிப்பை முடித்த தன்ஷிகா அவர்கள் அதன் பின்பு மாடலிங் துறையில் உள்ள ஆர்வத்தால் சில விளம்பர படங்களில் நடித்தார். இந்த விளம்பர படங்கள் மூலம் அடுத்த அடுத்த பட வாய்ப்புகள் இவருக்கு கிடைத்தது.

2006 ஆம் ஆண்டு தமிழில் வெளியான திருடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமானார் நடிகை தன்சிகா அவர்கள். அதே ஆண்டு மனதோடு மழைக்காலம் என்ற தமிழ் திரைப்படத்தில் அற்புதன் அவர்களின் இயக்கத்தில் ஷியாம் மற்றும் நித்தியா தாஸ் அவர்கள் நடித்த திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்திருந்தார் நடிகை தன்ஷிகா.

அதன் பின்பு 2009 ஆம் ஆண்டு பேராண்மை என்ற ஜெயம் ரவி அவர்களின் திரைப்படத்தில் எஸ்பி ஜெகநாதன் அவர்களின் இயக்கத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் நடிகை தன்ஷிகா அவர்கள். இந்த படத்தில் ஜெனிபர் என்ற கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் திரை உலகில் நன்கு அறிந்த நடிகையாக மாறினார்.

2010 ஆம் ஆண்டு வெளியான அருண் விஜய் அவர்கள் நடித்த மாஞ்சா வேலு என்ற திரைப்படத்தின் மூலம் முதன் முதலில் அனைவரும் அறிந்த கதாநாயகியாக அறிமுகமானார் இந்த படத்தை ஏ வெங்கடேஷ் அவர்கள் இயக்கினார்.

அரையாண்டு வெளியான நில் கவனி செல்லாதே என்ற திரைப்படத்தில் ஜோ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இந்த படத்தை ஆனந்த் சக்கரவர்த்தி அவர்கள் இயக்கினார் இந்த படத்திலும் கதாநாயகியாக நடித்திருந்தார் நடிகை தன்ஷிகா அவர்கள் .

2012 ஆம் ஆண்டு அரவான் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகர் ஆதி பசுபதி ஆகியோர் நடிப்பில் வெளியான இத்திரைப்படம் வசந்த பாலன் அவர்களின் கதையில் எடுக்கப்பட்டது. இந்த திரைப்படம் திரையரங்குகளில் மிகப்பெரிய வசூல் சாதனையை நிகழ்த்தா விட்டாலும் விமர்சனங்கள் மத்தியிலும் திரை பிரபலங்கள் மத்தியிலும் நல்ல கருத்துக்களை பெற்றது இந்த படத்தின் மூலம் தமிழில் முக்கிய நடிகையாக மாறினார் நடிகை தன்ஷிகா அவர்கள்.

நடிகை தன்சிகா அவர்களின் முழு நடிப்பாற்றலையும் வெளிப்படுத்தும் விதமாக 2013ஆம் ஆண்டு வெளியான பரதேசி என்ற இயக்குனர் பாலா அவர்களின் இயக்கத்தில் வெளியான இத்திரைப்படம் அதர்வா அவர்கள் கதாநாயகனாகவும் தன்ஷிகா அவர்கள் கதாநாயகியாகவும் நடித்திருந்த திரைப்படத்திற்கு பல விருதுகள் இவருக்கு கிடைத்தன.

2013 ஆம் ஆண்டு யா யா என்ற திரைப்படத்தின் மூலம் சிவா சந்தானம் ஆகியோர் நடிப்பில் நகைச்சுவை திரைப்படமாக வெளியாகி இருந்த இத்திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் நடிகை தன்ஷிகா அவர்கள். புதுப்புது கதாநாயகிகளின் வரவால் மார்க்கெட்டை இழந்த நடிகைகள் மத்தியில் இவரும் இணைந்தார் அதன் பின்பு சோசியல் மீடியாக்களில் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …