நடிகர் தனுஷ் மற்றும் செல்வராகவன் இருவரும் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்து வரும் ஒரு முக்கிய பிரபலங்களின் ஒருவராக திகழ்ந்து வருகின்றனர்.
இருவரும் திரைப்படத்துறையில் தமிழ் சினிமாவிற்கு ஒரு முக்கிய பங்களிப்பை பெற்று தந்துள்ளனர். தனுஷ் ‘துள்ளுவதோ இளமை’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆனார். இந்த படத்தை இவருடைய அண்ணன் செல்வராகவன் இயக்கியுள்ளார்.
இந்த படத்தில் இவருடைய நடிப்பு மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளதால் அடுத்தடுத்து நிறைய பட வாய்ப்புகளும் வந்த வண்ணம் இருந்தது. பிறகு தமிழ் சினிமாவில் நீங்காத ஒரு இடத்தை அண்ணனும் தம்பியும் பெற்றனர்.
இப்பொழுது இருவருக்கும் சோதனை காலம் போல் தோன்றுகிறது.செல்வராகவன் முதல் மனைவியான சோனியா அகர்வால் விவாகரத்து செய்திருந்தார். பிறகு இரண்டாம் திருமணம் இரண்டு வருடங்கள் கழித்து கீதாஞ்சலி என்பவரை திருமணம் செய்தார்.
இந்நிலையில் தனுஷ் அவர்கள் தற்போது 18 ஆண்டுகளுக்குப் பிறகு ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்து தமிழ் திரையுலகில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்நிலையில் இரண்டாவது திருமணத்திற்கு தயாராகிறார் என்று சமூக வலைதளங்களில் நிறைய இவரை பற்றி வதந்திகளும் பரவி வருகிறது.
இந்நிலையில் செல்வராகவன் ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தில் பேட்டி ஒன்றில் நான் முதலில் சோனியா அகர்வாலை விவாகரத்து செய்தேன், அப்போது இரண்டாவது திருமணம் பண்ணாதீர்கள் என்று தனுஷ் கூறினார். அப்படி இருக்கயில் தனுஷ் மட்டும் எப்படி இரண்டாவது திருமணம் செய்து கொள்வார் என்று அந்த பேட்டியில் தெரிவித்தார்.