இவரைப் பார்த்தாலே மனசுக்குள் பட்டாம்பூச்சி பறக்கும்… யார் அந்த பிரபலம்? ஸ்பெஷல் போட்டோவை வெளியிட்ட செல்வராகவன்…!!!

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதை அம்சத்தை எடுத்து அதில் தனது தம்பியை ஹீரோவாக நடிக்க விட்டு முதல் படத்திலேயே தமிழ் திரை உலகத்தை தன் பக்கம் திருப்பியவர் தான் இயக்குனர் செல்வராகவன்.

அவர் இயக்குனர் கஸ்தூரிராஜாவின் மூத்த மகனார். இவரது தம்பி தான் நடிகர் தனுஷ் கதைக்களத்தை வைத்து தொடர்ந்து திரைப்படங்களை இயக்காமல் வெவ்வேறு கதைக்களங்களில் வெவ்வேறு கற்பனை மிக்க கதைகளை இயக்கியதுதான் இவரது வெற்றிக்கு காரணம் என்று கூறலாம்.

துள்ளுவதோ இளமை படத்தை தொடர்ந்து இவர் காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை போன்ற படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது. ஆனால் பாருங்கள் இவர் எடுத்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் வெளிவந்த போது கிடைக்காத ஆதரவு பல ஆண்டுகளுக்குப் பிறகு ரசிகர்களுக்கு பிடிக்கத் துவங்கியது.

இதை நடிகர் பார்த்திபன் ஒரு மேடையில் பேசும்போது இரண்டு வருடங்களுக்கு பிறகு தான் இந்த கதாபாத்திரத்திற்கான அங்கீகாரம் தனக்கு கிடைத்ததாக கூறியிருக்கிறார்.

மேலும் இவர் இரண்டாம் உலகம், என் ஜி கே போன்ற படங்கள் தோல்வியை தழுவி இருந்தாலும் கடைசியாக இவர் இயக்கிய நானே வருவேன் திரைப்படம் மாஸ் வெற்றியை பெற்று தந்தது.

தற்போது ஒரு இயக்குனராக இருப்பதை விட நடிகராக மாறி கலக்கி வரும் இவர் பீஸ்ட் படத்தில் மிகச் சரியாக நடித்திருந்தார்.

இதனையடுத்து இவர் பகாசுரன் எனும் படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் இயக்குனர் மணிரத்தினத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு இவரை பார்த்தாலே எப்போதும் எனக்குள் ஒரு பாசிட்டிவ் ஃபீல் வந்துவிடும் என நெகிழ்ச்சியோடு வார்த்தைகளை போட்டுள்ளார்.

இந்த புகைப்படம் தான் தற்போது வைரலாக பரவி வருகிறது.இதனை அடுத்து ரசிகர்கள் இந்த புகைப்படத்தை பார்த்து ஏராளமான கமாண்டுகளை அவருக்கு பதிவு செய்து வருகிறார்கள்.

மேலும் இயக்குனராக இருப்பதோடு நின்று விடாமல் தற்போது இவர் நடித்துவரும் படங்களும் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துக்களையும் கூறி இருக்கிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …