ப்பா.. பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே.. இளசுகளை சுண்டி இழுக்கும் சீரியல் நடிகை..!

தென்னிந்திய சின்னத்திரைகளில் பிரபலமாக இருக்கும் நடிகைகளில் ரெபேக்கா சந்தோஷ் முக்கியமானவர். 26 ஜூலை 1998 இல் பிறந்தவர் நடிகை ரெபேக்கா சந்தோஷ். கேரளாவில் உள்ள திருச்சூரை சேர்ந்த இவர் வெகு காலங்களாகவே சின்னத்திரையில் அதிக ஈடுபாட்டுடன் பயணித்து வருகிறார்.

பெரும்பாலும் நடிகைகள் பிரபலமாக வேண்டும் என்றால் எடுத்த உடனேயே வெள்ளி திரைக்கு வருவது கிடையாது. அதிகபட்சம் மாடலிங் துறைக்கு சென்று அதன் மூலமாக நடிகை ஆவதற்கான வாய்ப்புகளை பெறுவார்கள். ஏனெனில் மாடலிங் துறையில் இருக்கும் பொழுது அதிகமாக விளம்பரங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

மாடலிங் துறையில் எண்ட்ரி:

அதேபோல சினிமாவிலும் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு மாடலிங் துறையில் உள்ளவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். அதே மாதிரிதான் சீரியல் நடிகைகளும் சில சீரியல் நடிகைகளுக்கு மக்கள் மத்தியில் அதிகமாக வரவேற்பு கிடைக்கும் பொழுது அவர்கள் பிறகு சினிமாவில் அதன் மூலமாக வாய்ப்பை பெறுகிறார்கள்.

பெரும்பாலும் சின்னத்திரைக்கு வாய்ப்பு தேடி வருபவர்கள் அதற்கு முன்பு தொகுப்பாளராக பணிப்புரிந்து இருப்பார்கள். அதேபோல ரெபேக்கா சந்தோஷ் சின்னத்திரைக்கு வருவதற்கு முன்பு தொகுப்பாளராக பணிபுரிந்து வந்தார்.

அதற்கு பிறகு ஏசியன் நெட் டிவி சேனலில் இவருக்கு முதன் முதலாக வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து நிறைய டெலிவிஷன் தொடர்களில் நடிக்க தொடங்கினார். சிறுவயதாக இருக்கும் போதே இவருக்கு நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைத்து விட்டது.

சிறு வயதிலேயே ஆக்டிங்:

2011 ஆம் ஆண்டு தன்னுடைய 12ஆவது வயதிலேயே குழந்தை கதாபாத்திரத்தில் சீரியல்களில் நடிக்க தொடங்கினார் ரெபேக்கா அப்பொழுதே அவருக்கு அதிகமான வரவேற்புகள் இருந்து வந்தன.

தொடர்ந்து 2012 க்கு பிறகு படிப்பில் கவனம் செலுத்திய பிறகு 2016 ஆம் ஆண்டு மீண்டும் சின்னத்திரைக்கு அறிமுகமானார் ரெபேக்கா சந்தோஷ். சூர்யா டிவியில் வெளியான ஒரு சீரியலில் இவருக்கு வாய்ப்பு கிடைத்த.

 அதே 2012 ஆம் ஆண்டு குழந்தை கதாபாத்திரமாக ஒரு மலையாள திரைப்படத்திலும் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஜெயராம் கதாநாயகனாக நடித்த இந்த திரைப்படத்தில் இவருக்கு அதிக வரவேற்பு கிடைத்தது.

தொடர்ந்து நிறைய டிவி நிகழ்ச்சிகளிலும் நாடகங்களிலும் நடித்து வருகிறார் நடிகை ரெபேக்கா சந்தோஷ். இதற்கு நடுவே திரைப்பட வாய்ப்புகளையும் பெற்று வருகிறார். இதுவரை ஐந்துக்கும் அதிகமான திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார். சமீபத்தில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அதிக வைரலாகி வருகின்றன. கண்டிப்பாக இன்னும் சில நாட்களில் முக்கியமான கதாநாயகியாக மாறுவார் என்று இவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …