கல்யாண முதல் காதல் வரை சீரியல் இயக்குநர் தாய் செல்வம். திடீர் மரணம்…! அதிர்ச்சியில் சின்னத்திரை…!!

சீரியல்களை இன்றைய இல்லத்தரசிகள் அதிகளவு பார்த்து வருகிறார்கள். அந்த வரிசையில் தற்போது இல்லத்து அரசிகளின் மனதை கவரும் படி இருக்கக்கூடிய சீரியல்களை இயக்கக்கூடிய இயக்குனர்களில் ஒருவர்தான் தாய் செல்வம்.

 இவர் இயக்கத்தில் வெளிவந்த கல்யாண முதல் காதல் வரை ஈரமான ரோஜாவே இரண்டு சீரியல்களில் அவர் கதையை நகர்த்திய விதம் படு அருமையாக இருப்பதால்தான் இளைஞர்களை மட்டுமல்லாமல் இல்லத்தரசிகளும்  விரும்பிப் பார்க்கும் சீரியலாக இது அமைந்ததுள்ளது.

இவர் வெள்ளி திரையில் கலக்க முடியாத இயக்குனர்கள் வரிசையில் இவரும் ஒருவர் என்று கூறலாம். அந்த வகையில் இவர்  நடிகரும் இயக்கணருமான எஸ்.ஜே சூர்யாவை வைத்து நியூட்டன் ஏழாம் விதி என்கின்ற படத்தை இயக்கியவர்.

மேலும் தாய்  செல்வம் இந்த படம் இவருக்கு மாபெரும் வெற்றியை தந்து திருப்புமுனையாக அமையும் என்று எதிர்பார்த்து இருந்த வேளையில் எதிர்பாராத தோல்வியை இந்தப் படம் இவருக்கு தந்தது. இதனை அடுத்து வெள்ளி திரையை விட்டு விலகி வந்த இவர் சின்ன திரையை கையில் எடுத்துக்கொண்டு கலக்கிய இயக்குனர்களில் ஒருவர் என்று கூறலாம்.

 அந்த வகையில் சின்ன திரையை பொருத்தவரை இவர் காத்து கருப்பு, தாயுமானவர், கல்யாண முதல் காதல் வரை, மௌன ராகம் சீசன் 1, நாம் இருவர் நமக்கு இருவர், பாவம் கணேசன் போன்ற சீரியல்களை இயக்கியிருக்கிறார்.

 மேலும் தற்போது ஈரமான ரோஜாவே இரண்டு சீரியலையும் இயக்கி வருகிறார். டிஆர்பி ரேட்டை தக்க வைத்துக்கொள்ள உதவக்கூடிய இவரது சீரியல்கள் மக்கள் மத்தியில் பிரபலமானதாகும்.

இவரது ஒளிப்பதிவை குறிப்பிட்டு நாம் பேசலாம் இத்தகைய சூழ்நிலையில் இந்த சீரியலின் இயக்குனர் தாய் செல்வம் மறைந்துவிட்டார் என்ற செய்தி ரசிகர்களிடம் மட்டுமல்லாமல் சின்ன திரையில் இருப்பவர்களையும் ஆழ்ந்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

இவரது மரணத்திற்கு காரணம் என்ன என்பது தற்போது வரை தெரிய படாத நிலையில் அனைவரும் அவருக்கு இரங்கல்களை தெரிவித்து வருகிறார்கள். மேலும் அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும் அவர் அவர்கள் ஆறுதல் சொல்லி வருகிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …