குடும்பத்தினருடன் ஷாலினி அஜித்குமார் பிறந்தநாள் கொண்டாட்டம் – வைரலாகும் புகைப்படங்கள்..!

ஷாலினி : கோலிவுட் ரசிகர்களால் அதிகளவு கொண்டாடப்படக்கூடிய முன்னணி ரசிகர்களில் ஒருவராக திகழ்வதுதான் அஜித். இவரை இந்த பெயர் சொல்லி அழைப்பதை விட தல என்று அழைப்பதையே இவரது ரசிகர்கள் பெரும்பாலும் விரும்புவார்கள்.

திரையுலகில் எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் தானாகவே இந்த அளவு கடும் முயற்சி மற்றும் உழைப்பால் ஒரு முக்கிய இடத்தை பிடித்திருக்கக் கூடிய தல அஜித் 2000 ஆவது வருடம் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அமர்க்களம் என்ற திரைப்படத்தில் இருவரும் நடித்த போதுதான் இவருக்கு இடையே காதல் மலர்ந்தது. இந்த திரைப்படத்தின் ஷூட்டிங் போது எதிர்பாராத விதமாக ஷாலினியின் கையில் காயம் ஏற்பட அக்கறை காட்டிய அஜீத் மீது நாளடைவில் ஷாலினிக்கு காதலை ஏற்படுத்தியது.

தற்போது இவர்களுக்கு மகன் மற்றும் மகள் உள்ள நிலையில் நடிகையான ஷாலினி திருமணத்திற்கு பிறகு சினிமாவுக்கு பை பை சொல்லிவிட்டார். அதன் பிறகு ஒரு படத்தில் கூட அவர் நடிக்கவில்லை. சில நாட்களுக்கு முன்பு இவர் பொன்னியின் செல்வன் படத்தில் ரீஎன்ட்ரி கொடுத்து உள்ளதாக வதந்திகள் பரவியபோதும் அதற்கு எந்த பதிலும் தராமல் இருந்தால் படம் வெளிவந்த உடனேயே அது வதந்தி என்பது அனைவருக்கும் புரிந்து விட்டது.

தற்போது திருமணம் ஆகி 22 ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும் அதே அன்போடும் காதலோடும் இந்த ஜோடிகள் இருக்கிறார்கள். அவ்வப்போது இவர்கள் தங்களது ரொமான்டிக் புகைப்படங்களை வலைதளங்களில் வெளியிடுவது உண்டு.

அந்த வரிசையில் நேற்று பிறந்தநாள் கொண்டாடி இருக்கும்போது தல அஜித் தன் மனைவியின் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

இந்த புகைப்படத்தில் ஷாலினி சோபாவில் அமர்ந்திருக்கும் நிலையில் அஜித் நின்றபடி போஸ் கொடுத்திருக்கிறார். இந்த புகைப்படம் தான் தற்போது சோசியல் மீடியாவில் செம வைரல் ஆகி வருகிறது. அவ்வளவு வேலைப்பளு இருந்த போதிலும் தன் மனைவியின் பிறந்தநாளுக்கு மனைவியோடு இருந்து வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கும் தல அஜித் வேற லெவல் என்று அவரது ரசிகர்கள் அவரை போற்றி வருகிறார்கள்.

மேலும் இவர் தற்போது நடித்து முடித்திருக்கும் துணிவு திரைப்படம் பொங்கலுக்கு வர உள்ளதால் அதனை காணும் ஆர்வத்தோடு அனைவரும் காத்திருக்கிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …