12 வயசுலையே என்னிடம் இதை செய்தார்.. மம்முட்டியின் ரகசியத்தை உடைத்த சாந்தி வில்லியம்ஸ்.. ரசிகர்கள் அதிர்ச்சி..!

நடிகை சாந்தி வில்லியம்ஸ் தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் நடிகையாக வலம் வந்த முக்கிய நடிகை ஆவார். சீரியல் மூலமாக இவர் இப்பொழுது மக்கள் மத்தியில் பிரபலமான ஒருவராக இருந்து வருகிறார்.

முக்கியமாக மெட்டி ஒலி சீரியலில் ராஜம் என்கிற இவரது கதாபாத்திரம் யாராலும் மறக்க முடியாத கதாபாத்திரமாக இருக்கும். அந்த சீரியலின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அவரது கதாபாத்திரம்தான் இருந்தது.  ஒருவேளை அந்த ராஜம் கதாபாத்திரத்தில் இவரை தவிர வேறு யார் நடித்திருந்தாலும் இவர் அளவுக்கு அந்த கதாபாத்திரம் உயிர்ப்புடன் இருந்திருக்குமா? என்பதே கேள்விதான்..

என்னிடம் இதை செய்தார்

அந்த அளவிற்கு அதை சிறப்பாக செய்திருந்தார் சாந்தி வில்லியம்ஸ். சாந்தி வில்லியம்ஸ் இளமை காலங்களில் நிறைய திரைப்படங்களை தயாரித்து இருக்கிறார். அவரும் அவரது கணவரும் சேர்ந்து நிறைய படங்களை தயாரித்துள்ளனர். அந்த சமயங்களில் நிறைய மலையாள நடிகர்களுடன் இவருக்கு தோழமை இருந்து வந்தது.

எனவே அவர்களை குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியிருந்தார் சாந்தி வில்லியம். அதில் கூறும்பொழுது நடிகர் மோகன்லால் குறித்து சர்ச்சைக்குரிய பல விஷயங்களை பேசி இருந்தார். நடிகர் மோகன்லால் ஒரு நன்றி மறந்தவர் என்றும் தனது கணவர் அவருக்கு எவ்வளவோ செய்திருந்த போதிலும் மோகன்லால் தனது கணவரின் இறப்புக்கு கூட வரவில்லை என்றும் மிகப் கோபமாக பேசியிருந்தார் சாந்தி வில்லியம்ஸ்.

ரகசியத்தை உடைத்த சாந்தி வில்லியம்ஸ்

எனவே மோகன்லாலை எனக்கு பிடிக்கவே பிடிக்காது ஊருக்கே அவரை பிடித்திருந்தாலும் எனக்கு பிடிக்காது என்று வெளிப்படையாக சாந்தி வில்லியம்ஸ் கூறி விட்டார். அதனை தொடர்ந்து நடிகர் மம்முட்டி குறித்து கூறும்போது மம்முட்டி மிகவும் நல்லவர். அவர் எப்போதும் அவர் உண்டு அவர் வேலை உண்டு என்று இருப்பார்.

யாரிடமும் எந்த சண்டை சச்சரவும் வைத்துக் கொள்ள மாட்டார். மலையாள சினிமாவில் பெரிதாக கிசுகிசுகள் எதுவும் இல்லாத நடிகர் என்றால் அது மம்முட்டி தான். அவரை போலவே அவருடைய மகனும் இருக்கிறார். அவரது மகனும் சினிமாவிற்கு வந்தது முதலே நல்ல பிள்ளையாக இருந்து வருகிறார்.

இவர்கள் இருவருமே அவர்கள் குடும்பத்தின் மீதுதான் அதிக முக்கியத்துவம் கொடுக்க கூடியவர்கள் என்று கூறி இருக்கிறார் சாந்தி வில்லியம்ஸ். இந்த நிலையில் எத்தனை பேர் உங்களை காதலித்துள்ளனர் என்று சாந்தி வில்லியம்ஸிடம் கேட்ட பொழுது அது எனக்கு எக்கச்சக்கமாக வந்திருக்கிறது.

ரசிகர்கள் அதிர்ச்சி

என்னுடைய 12 வயதிலேயே நான் ஒரு படத்தில் வேலை பார்த்த பொழுது அதன் படத்தின் உதவி இயக்குனர் என்னை காதலிப்பதாக காதல் கடிதத்தை கொடுத்தார். ஆனால் காதல் கடிதம் என்றால் என்னவென்று எனக்கு தெரியாத காரணத்தினால் நான் அதை என்னுடன் நடித்த சக நடிகையிடம் கொண்டு சென்று கொடுத்தேன்.

அவர் ”உனக்கு அவன் லவ் லெட்டர் எழுதி இருக்காண்டி” என்று கூறினார் பிறகு இது குறித்து நான் எனது வீட்டில் கூறினேன். அந்த உதவி இயக்குனரும் இது குறித்து எங்கள் வீட்டில் வந்து பேசினார் இதனால் கடுப்பான எனது அம்மா திரும்ப எனது வீட்டு பக்கம் வந்து விடாதீர்கள். வந்தால் அடுத்த முறை துடப்பக்கட்டை தான் பேசும் என்று கூறிவிட்டார் என்று அந்த நிகழ்வை பகிர்ந்திருக்கிறார் சாந்தி வில்லியம்ஸ்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …