ப்பா.. என்னா லெக்பீசு.. கண்ட்ரோல் பண்ணவே முடியல.. திணறடிக்கும் நெடுஞ்சாலை ஷிவதா நாயர்..!

ஷிவதா நாயர், (Shivada Nair) நெடுஞ்சாலை படம் மூலம், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானார். இவரது இயற்பெயர் ஸ்ரீலேகா கே.வி. கடந்த 1986 ம் ஆண்டில் பிறந்த இவருக்கு வயது 37 ஆகிறது. திருச்சியைச் சேர்ந்த இவர், சிறு வயதிலேயே கேரளாவுக்கு புலம்பெயர்ந்தார். இவரது கணவர் பெயர் முரளிகிருஷ்ணன்.

சிவாதாவின் பெற்றோர்விஜயராசன் – குமாரி. 5ம் வகுப்பு வரை திருச்சியில் படித்த சிவாதா, பின் கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள அங்கமாலிக்கு குடிபெயர்ந்தது.

Shivada Nair

அதன்பின், அங்கமாலி விஸ்வஜோதி சிஎம்ஐ பொதுப்பள்ளியில், சிவாதா பள்ளி படிப்பை முடித்தார். அதன்பின், கடந்த 2008ம் ஆண்டில், ஆதிசங்கராபொறியியல் கல்லூரியில் கணினி பொறியியல் பட்டம் பெற்றார். தனது நீணட கால காதலரான முரளி கிருஷ்ணனை மணந்தார்.

கடந்த 2009ம் ஆண்டில், கேரள கபே என்ற மலையாள படம் ஒன்றில், சின்ன கேரக்டரில் சிவாதா நாயர் அறிமுகமானார். ஆனால், அவர் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் கண்டுகொள்ளப்படவில்லை. அதன்பின், டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக, சிவாதா பணிபுரிந்தார். அப்போது, பிரபல மலையாள பட இயக்குநர் பாசில் இவரை சந்தித்தார்.

Shivada Nair

அதன்பின், மீண்டும் 2011ம் ஆண்டில் லிவிங் டு கெதர் என்ற படத்தில், முக்கிய கேரக்டரில் சிவாதாவை, அவர் நடிக்க வைத்தார்.

அதற்கு பிறகு, தமிழ் சினிமாவில் சிவாதா நாயர் அறிமுகமானார். நெடுஞ்சாலை என்ற தமிழ் படத்தில், நடித்தார். இதில், ஆரி கதாநாயகனாக நடித்திருந்தார். பிக்பாஸ் சீசன் 5ல், வின்னராக வெற்றி பெற்ற ஆரி தான்.

மலையாளம் தாய்மொழியாக இருந்தும், இந்த படத்தில் சிவாதா நாயர் தமிழில் பேசி நடித்தார். சாலையோர உணவு விடுதி ஒன்றை நடத்தும் மலையாளத்தை சேர்ந்த கிராமத்து பெண்ணாக மங்கா கேரக்டரில் நடித்திருந்தார்.

Shivada Nair

பாவாடை சட்டையுடன், நெற்றியில் சந்தன கீற்று, விரித்து விடப்பட்ட தலைமுடி என, மருண்ட விழி பார்வையில் மிக அழகான பெண்ணாக, சிவாதா ரசிகர்களின் மனங்களை கொள்ளையடித்தார்.

அடுத்து, இயக்குநர் சிவமோகா இயக்கிய ஜீரோ படத்தில், பிரியா என்ற கேரக்டரில் நடித்தார். அதேகண்கள் என்ற படத்தில், கண் பார்வையற்ற வசதிபடைத்த இளைஞர்களை ஏமாற்றி பணம் பறிக்கும் ஒரு வில்லி கேரக்டரில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார். தமிழ் மற்றும் மலையாள படவுலகில், சிவாதா நாயர் மிக முக்கிய இடத்தை பிடிக்க வேண்டியவர்.

Shivada Nair

ஆனால் சிறந்த அழகும், இளமையும், முக வசீகரமும், நடிப்பாற்றலும் மிக்க இவருக்கு, அடுத்தடுத்து பட வாய்ப்புகள் அமையாததுதான், அவரது பின்னடைவுக்கு காரணம்.

தமிழ் சினிமாவில், மேக்கப் இல்லாத நேரத்தில் மிக சுமாரான அழகில் இருக்கும் நடிகைகள் கூட முன்வரிசை நாயகியாக வலம் வரும் நிலையில், இயல்பிலேயே வசீகரிக்கும் அழகும், தோற்றமும் கொண்ட சிவாதா பெரிய அளவில் பேசப்படாதது, அவருக்கும் பலத்த ஏமாற்றத்தையே தந்திருக்கும்.

Shivada Nair

எனினும் பள்ளி நிகழ்ச்சிகள், பொதுநிகழ்ச்சிகள், தொழில் மற்றும் வர்த்தக நிறுவன நிகழ்ச்சிகளில், சிறப்பு விருந்தினராக சிவாதா அடிக்கடி பங்கேற்று வருகிறார். சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருக்கும் அவர், தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை, வீடியோக்களை அப்டேட் செய்து, ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்துகிறார். சமீபத்தில் அவர் பதிவிட்ட இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *