மாலத்தீவில் மாஸ் காட்டி… ரொமான்ஸில் உச்சம் காட்டும் ஷ்ரேயா – சித்து!

 சமீபத்தில் சின்னத்திரை முதல் பெரிய திரை வரை காதல் திருமணம் என்பது மிகவும் அதிக  அளவில் பெருத்து விட்டது என்று கூறலாம். சீரியலில் ஜோடியாக நடிக்கும் இவர்கள் நிஜ வாழ்வில் ஜோடியாக மாறுவது தற்போது பெருகி வருகிறது.

 உதாரணமாக ராஜா ராணி சீரியலில் நடித்த ஆலியா மானசா சஞ்சய் , சேத்தன் தேவதர்ஷினி, ராஜ்கமல் லதா ராவ் முதல்  ஸ்ரீஜா செந்தில் , ரக்ஷிதா தினேஷ் போன்றவர்களை நாம் கூறலாம்.

இதனை அடுத்து பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் திருமணம் என்ற சீரியல் நாயகனாக நடித்த சித்துவும், கதாநாயகியாக நடித்த ஷ்ரேயாவும் காதலித்து வந்த நிலையில்  இவர்களின் பெற்றோர் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டார்கள்.

 இவர்கள் திருமணத்திற்குப் பின்பு இணைந்து ராஜா ராணி தொடரில் நடித்து வருகிறார்கள். மேலும் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் ரஜினி தொடரிலும் ஷ்ரேயா நடித்து வருகிறார்.

 ஷூட்டிங்கில் பிஸியாக இருந்தாலும் அவ்வப்போது வெளியிடங்களுக்கு சென்று வருவதை வாடிக்கையாக கொண்டிருக்கும் இவர்கள் அவர்கள் வெளியே செல்லும் பகுதிகளில் எடுக்கப்படும் புகைப்படங்களை ரசிகர்களுக்காக பதிவிடுவது வழக்கம்.

 அந்த வரிசையில் இந்த தம்பதிகள் தற்போது மாலத்தீவுக்கு விசிட் அடித்து இருக்கிறார்கள். மாலத்தீவுக்கு சென்றிருக்கக்கூடிய இவர்கள் தற்போது வெளியீட்டு இருக்கக்கூடிய போட்டோவை பார்க்கும் போது மிகவும் ஹார்ட்டாகவும் ஸ்வீட்யாகவும் உள்ளது. அந்த அளவு தங்களது காதலை ஒவ்வொரு புகைப்படத்திலும் வெளியிட்டிருக்கிறார்கள்.

 காதல் சொட்டச் சொட்ட அவர்கள் இருவரும் கைகளை கோர்த்தும், அணைத்தும், மனைவியை தூக்கி இருக்கும்… காட்சிகள் அனைத்தும் ரசிகர்களால்  எப்போது பார்க்கப்பட்டு வருகிறது.

தற்போது அனைத்து நடிகர்களும் மாலத்தீவில் இது போன்ற புகைப்படங்களை எடுத்து வெளியிடுவது வாடிக்கையாக இருந்தாலும் எந்த புகைப்படங்கள் அனைத்துமே மிக நேர்த்தியாக இருப்பதோடு ஆபாசம் அதிகளவு இல்லாமல் இருப்பதுதான் நிம்மதியை ஏற்படுத்தி உள்ளதாக சில ரசிகர்கள் கமெண்ட் செய்துள்ளார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …