இது தான் சில்க் ஸ்மிதா-வின் “அந்த” பழக்கத்திற்கு காரணம்..! – போட்டு உடைத்த பிரபலம்..!

நடிகை சில்க் ஸ்மிதா ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து அதன் பிறகு வீட்டின் வறுமை காரணமாக சென்னைக்கு வந்து சினிமா நடிகைகளின் மேக்கப் போடுபவராக பணியாற்றி அதன் மூலம் திரைத்துறையினரின் தொடர்பு கிடைத்ததன் மூலம் சினிமாவில் நுழைந்தார்.

ஆரம்பத்தில் சினிமாவில் நல்ல நடிகையாக வர வேண்டும் என்று தான் ஆசையோடு இருந்தார் நடிகை சில்க் ஸ்மிதா. ஆனால் இவருடைய கவர்ச்சியான தோற்றம் கவர்ந்திழுக்கும் கண்கள் வாட்டசாட்டமான உடல்வாகு என இதனை பார்த்த சினிமா துறையினர் இவருக்கு கவர்ச்சியான கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்க வாய்ப்பு கொடுத்தனர்.

அந்த வகையில் மலையாளத்தில் ஒரு திரைப்படத்தில் நடித்திருந்தார். ஆனால் அந்த திரைப்படம் வெளியாகாமல் போய்விட்டது. அதனை தொடர்ந்து நடிகர் சிவகுமார் நடிப்பில் உருவான வண்டிச்சக்கரம் என்ற திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை சில்க் ஸ்மிதா.

இவருடைய உண்மையான பெயர் விஜயலட்சுமி. திரைப்படத்தில் நடிப்பதற்காக ஸ்மிதா என்று பெயரை மாற்றிக்கொண்டார். இவர் நடிக்க முதல் படத்தில் இவருடைய கதாபாத்திரத்தின் பெயர் சிலுக்கு என்பதாகும். இதன் பிறகு இவரை சில்க் ஸ்மிதா என்று அடையாளம் கண்டனர் ரசிகர்கள்.

இந்த கதாபாத்திரம் நடிகர் வினுச்சக்கரவர்த்தியால் சில்க்ஸ்மிதாவுக்கு கிடைத்தது. இந்த படத்தில் மதுபான விடுதி ஒன்றில் வரும் வாடிக்கையாளர்களுக்கு மது ஊற்றி கொடுக்கும் பெண்ணாக படுகிளாமராக நடித்து ரசிகர்களை அதிர வைத்தார் நடிகை சில்க் ஸ்மிதா.

அந்த படத்தில் இருந்து அடுத்தடுத்து இவருக்கு அசுர வளர்ச்சி. கிட்டதட்ட 15 ஆண்டுகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முடித்து விட்டார். ஒரே நாளில் வேறு வேறு இடங்களில் வேறு வேறு படங்களில் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தியவர் நடிகை சில்க் ஸ்மிதா என்பது குறிப்பிடத்தக்கது.

எப்படி என்றால் மும்பையில் ஒரு படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு அங்கிருந்து விமானத்தில் சென்னைக்கு வந்து சென்னைக்கு வரும் வழியிலேயே அந்த இன்னொரு படத்தில் நடிப்பதற்கு உண்டான ஆடைகளை மாற்றிக்கொண்டு சென்னைக்கு வந்து ஒரு படப்பிடிப்பு நடத்தி விட்டு அங்கிருந்து மீண்டும் வேறு ஒரு இடத்திற்கு சென்று அந்த படப்பிடிப்பிலும் கலந்து கொண்டு இப்படி காலில் சக்கரம் கட்டிக்கொண்டு பணத்தை சம்பாதித்தார் நடிகை சில்க் ஸ்மிதா.

ஆனால் அவருடைய முடிவு சோகமாக இருந்தது. என்னை அனைவரும் ஒரு பொருளாக மட்டுமே பார்க்கின்றனர். ஒரு மனுஷியாக உணர்வுள்ள ஒரு பெண்ணாக யாரும் என்னை பார்க்கவில்லை.

அப்படி என்னை பார்க்கிறார்கள் என்று நான் நம்பியவர்கள் கடைசியாக அவர்களும் என்னை பொருளாக தான் பார்த்திருக்கிறார்கள் என்று தெரிய வரும்போது மணமுடைந்தேன். எனக்கு அன்பு என்ற ஒரு விஷயமே என் வாழ்க்கையில் எனக்கு கிடைக்கவில்லை என்று தன்னுடைய இறுதியான கடிதத்தில் எழுதியிருந்தார். நடிகை சில்க் ஸ்மிதா.

இது ஒரு பக்கம் இருக்க படங்களில் நடிக்க ஆரம்பிக்கும் பொழுது இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகினார் என்பது குறிப்பிடத்தக்கது. படங்களில் ஒரு படங்கள் இரண்டு படங்கள் இல்லாமல் ஒரே நாளில் பல்வேறு படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து மிகவும் பிரகாசமான விளக்குகளின் முன் நின்று கொண்டு நடித்து இரவு வந்து படுத்தால் தூக்கம் வராமல் தவித்து இருக்கிறார் நடிகை சில்க் ஸ்மிதா.

இதனால் நன்றாக தூங்க வேண்டும் என்று முதலில் மதுவை நாடி இருக்கிறார். காலப்போக்கில் அவருக்கு இவர் அடிமையாகி விட்டார் என்று பிரபல பத்திரிகையாளர் ஒருவர் சமீபத்தில் தன்னுடைய பேட்டி ஒன்றில் பதவி பகிர்ந்து இருக்கிறார்.

Summary in English : Actress Silk Smita’s struggle with addiction has been a topic of interest for many. Recently, a famous journalist has said that the reason for her addiction was due to lack of sleep.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …