கவர்ச்சி கன்னி சில்க் ஸ்மிதாவின்…கடைசி நிமிடங்கள்…! – இதனால் தான் தற்கொலை செய்து கொண்டாரா..?

தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இன்றும் நீங்கா இடம் பிடித்த நடிகை என்றால் அது சில்க் ஸ்மிதா மட்டுமே. கவர்ச்சி, குணச்சித்திரம், நடனம் என அனைத்து விதமான கதாபாத்திரங்களில் நடித்து எண்பதுகளில் ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் நடிகை சில்க் ஸ்மிதா.  நடிகர் வினுசக்கரவர்த்தியால், வண்டிச்சக்கரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.

 நடிகை சில்க்ஸ் ஸ்மிதா  1995 ல் இவர் கடைசியாக நடித்த படம் ராக தாளங்கள்.சினிமாவை தன் வசம் வைத்திருந்த சில்க் சிமிதாவின் கால்ஷிட்டிற்காக ஒரு காலத்தில் இயக்குனர், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் என பல பேர் காத்துக் கொண்டிருப்பார்கள்.

திரைப்பட வாழ்க்கையில் மிகப்பெரிய கவர்ச்சிக் கன்னியாக வலம் வந்த போதிலும் இவர் சாதாரணமாக பெண்ணாகத்தான் தன் வாழ்க்கையை நடத்த வேண்டும் என்று நினைத்திருந்தார்.

 ஆனால் அதற்கு மாறாக திரையுலக பிரபலங்கள் மற்றும் திரையுலகம் தாண்டி உள்ள பிரபலங்கள் இவருக்கு மிகவும் நெருக்கடிகள் அதிகளவு ஏற்பட்டது எந்த நெருக்கடிகளால் மிகுந்த மன அழுத்தத்துக்கு ஆளான இவர் தீய பழக்கங்களுக்கு அடிமையாகி விட்டார்.

கோடி கோடியாக பணம் இருந்தும் நிம்மதி இல்லாமல் இருந்தார். அவருக்கு தொல்லைகள் மேல் தொல்லைகள் அரசியல் வாதிகள் கவர்ச்சி நடிகையை என்பதால் படுக்கையை பகிர்ந்துள்ள முயற்சி செய்தனர்.

ஆனால் அவரோ நடிப்பிற்கு மட்டும் தான் கவர்ச்சி நடிகை, நிஜத்தில் மானத்துடன் வாழ விரும்புகிறேன் என குறிப்பிட்டிருந்தார். இதனால் அவர் அனுபவித்த வேதனைகள் ஏராளம். இதனால் இது பற்றி பேச சில்க் பலரிடம் முயற்சித்த போதும் அதற்கு சிலர் அடியாட்களை வைத்து மிரட்டி இருந்தனர்.

ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் 1996ம் ஆண்டு செப்டம்பர் 23ம் தேதி நடிகை சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலை முடிவுக்கு காதல் தோல்வி, குடிப்பழக்கம், மன அழுத்தம் போன்ற காரணங்கள் இருந்திருக்கலாம் என பலர் கூறினர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …