“அவதார் 2 படத்தை பார்த்த சிம்பு…” – என்ன சொல்லியிருக்கார் பாருங்க..!

அவதார் 2 : இப்படியெல்லாம் கற்பனை செய்து பார்க்க முடியுமா? என்று யோசிக்க கூடிய நிலையில் அற்புதமான அவதார் படம் 2009 ஆம் ஆண்டு ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளிவந்தது.

இந்தப் படம் வெளிவந்த ஒரு சில நாட்களிலேயே மக்களின் மனதில் பெரும் அளவு இடம் பிடித்ததோடு பல வகைகளில் விமர்சனங்கள் எழுந்தது. அதுமட்டுமல்லாமல் இத்திரைப்படம் உலக அளவில் மிகப்பெரிய வசூலில் சாதனையை படைத்தது.

இதனை அடுத்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகமான அவதார் தி வே ஆப் வாட்டர் திரைப்படம் தற்போது நீண்ட இடைவெளிகளுக்கு பிறகு வெளிவந்துள்ளது.

இதனை அடுத்து ஒவ்வொரு நாடுகளிலும் இந்த படத்தைப் பற்றிய கருத்துக்கள் பேசும் பொருளாக மாறிவிட்ட நிலையில் திரை உலக பிரபலங்கள் அனைவரும் இந்தப் படத்தை பற்றிய கருத்துக்களை தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள்.

மேலும் இதுவரை இந்த இரண்டாம் பகுதியை பார்த்த ரசிகர்கள் மட்டுமல்லாமல் பிரபலங்களும் படத்தை பற்றிய பாசிட்டிவ் கமாண்டுகளை அதிகமாக வைத்திருக்கின்ற இந்த வேளையில் படம் பற்றிய விமர்சனத்தை சமூக வலைதள பக்கங்களிலும் பகிர்ந்து வருகிறார்கள்.

இந்நிலையில் இந்த படத்தை நடிகர் லிட்டில் சூப்பர் ஸ்டார் சிலம்பரசன் நேற்று, தாய்லாந்தில் உள்ள திரையரங்கில் பார்த்திருக்கிறார். மேலும் இந்த படத்தை பார்த்துவிட்டு அவர் அதற்கான விமர்சனத்தை செய்திருக்கிறார்.

தற்போது அந்த விமர்சனம் தான் இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி உள்ளது என கூறலாம். அட.. அப்படி என்ன விமர்சனம் செய்தார் என்று நீங்கள் யோசிப்பது எனக்கு நன்றாகவே தெரிகிறது. அது எப்படிப்பட்ட விமர்சனம் என்றால் அந்த படத்தை பார்த்த சிம்பு க்ளாப் எமோஜியை பதிவிட்டு படம் பக்கா சூப்பர் என்று கூறியிருக்கிறார்.

இதனை அடுத்து இந்த படமும் பார்ட் ஒன் அவதார் படத்தைப் போல வசூலில் வாரிக் குவிக்கும் என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை. மேலும் ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைத்து தரப்பிலிருந்தும் இந்த படத்தை பார்ப்பதற்காக தற்போது திரையரங்குகளை நோக்கி மக்கள் படையெடுத்து வருகிறார்கள்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வாயை பிளந்து பார்க்க வைக்கக்கூடிய நிலையில் இந்த படத்தை நேர்த்தியான முறையில் தொழில்நுட்ப உதவியோடு மிக அருமையாக ஒவ்வொரு காட்சியையும் தத்ரூபமாக படம் பிடித்திருப்பது படத்திற்கு கூடுதல் பிளஸ் ஆகும்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …