சிம்பு நடித்த வல்லவன் படத்தில் லூசு பெண்ணே …லூசு பெண்ணே… என்ற பாடல் இடம்பெற்றிருந்தது அனைவருக்கும் தெரியும். இந்தப் பாடல் பட்டி தொட்டியெங்கும் ஒலித்தது. அந்த பாடல் பிறந்த கதையை பற்றி சிம்பு மிகத் தெளிவாக தற்போது கூறியிருக்கிறார்.
இவர் நடித்த வெந்து தணிந்தது காடு படம் தற்போது மிகப்பெரிய வெற்றியை தந்துள்ளது. பொதுவாக இவர் தானே பாட்டு எழுதி அதைப் பாடக் கூடிய ஆற்றல் பெற்றவர். அந்த வரிசையில்தான் என்ற லூசு பெண்ணே… லூசு பெண்ணே …என்ற பாடலையும் இவர் எழுதியிருந்தார்.
யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் பாடலை அவர் சொந்தக்குரலில் பாடியிருக்கிறார். இந்தப் பாடலை யாரை நினைத்து எழுதியிருக்கிறார் என்ற நீண்ட நாள் கேள்விக்கு தற்போது விடை கிடைத்துவிட்டது.
லிட்டில் சூப்பர் ஸ்டார் ஆன சிம்பு தனது முன்னாள் காதலியான திரிஷாவை நினைக்கத்தான் இந்த பாடல் வரிகளை எழுதி இருப்பதாக கூறுகிறார்.
மேலும் தற்போது பொன்னியின் செல்வனில் குந்தவையாக நடித்திருக்கும் தனது காதலிக்கு ஏதாவது பிரச்சனை ஏற்பட்டு விடுமோ? என்று நினைத்து இல்லை இதை நான் விளையாட்டாக தான் கூறினேன் என அந்தர் பல்டி அடித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து தற்போது திரிஷாவின் நடிப்பை பொன்னியின் செல்வனின் பார்த்துவிட்ட ரசிகர்கள் அவரை மிகவும் கொண்டாடி வருகிறார்கள். ஆரம்ப காலகட்டத்தில் அவர் திரையுலகுக்கு வந்த போது எடுத்த புகைப்படங்களை பதிவிட்டு அவர்களின் புகழை பாடி வருகிறார்கள். இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
நடிகர் சிம்புவும் வெந்து தணிந்தது காடு மாபெரும் வெற்றிக்குப் பின்னால் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகி அந்த பட வேலைகளில் நிமித்தமாக மிகவும் பிஸியாகிவிட்டார் . அதுபோலவே திரிஷாவும் மேலும் பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி படு பிஸி செட்டியூலில் இருப்பதாக தெரிகிறது.
லூசு பெண்ணே… லூசு பெண்ணே… பாடல் பிறந்த கதை க்கான விடை தெரிந்து விட்ட குஷியில் இருந்த ரசிகர்கள் சிம்பு அடித்திருக்கும் அந்தர்பல்டி ஏமாற்றத்தை சந்தித்து விட்டார்கள்.