நடிகர் சிம்பு என்றாலே வாய் துடுக்குத்தனம் அதிகம் இருக்கும் நடிகர் என்று திரையுலக வட்டாரமே கூறும். அதுமட்டுமல்லாமல் பல சர்ச்சைகளை சிக்கி பேசும் பொருளாக இவர் மாறிவிடுவார்.
இதனை அடுத்து பட வாய்ப்புகள் இல்லாமல் கடும் சரிவில் இருந்த இவருக்கு மாநாடு படமானது மாபெரும் வெற்றியைத் தந்து மீண்டும் திரை உலகில் வெற்றி நடை போடுவதற்கான வாய்ப்பை கொடுத்தது என்று கூறலாம்.
அதன் பிறகு இவர் நடிப்பில் வெளிவந்த வெந்து தணிந்தது காடு படமும் மிகப் பெரிய அளவு வெற்றியைத் தந்து இவரை தலை நிமிர வைத்தது.
அதுமட்டுமல்லாமல் வசூலையும் வாரி கொடுத்து சிம்புவுக்கு இனி பட வாய்ப்புகளே கிடைக்காது ஜோலி முடிந்தது என்று நினைத்தவர்களின் வாயை அடித்து வந்துட்டேன்னு சொல்லு… மீண்டும் வந்துட்டேன்னு சொல்லு… என்ற வசனத்தை உறுதிப்படுத்தியது.
தற்போது விஜய்யின் வாரிசு படத்திற்காக சிம்பு பாடிய தீ தளபதி பாடல் சமீபத்தில் ரிலீஸ் ஆகி மாபெரும் கிட்டை கொடுத்தது.இந்த பாடல் வீடியோவில் சிம்பு நடனம் ஆடி இருந்ததை பார்த்து ரசிகர்கள் அதிர்ந்து விட்டார்கள்.
அந்த அளவு சிம்பு நேர்த்தியான தனது நடன திறனை இதில் காட்டி இருப்பார். 35 வயதாகும் சிம்புவுக்கு இன்னும் திருமணம் ஆகாத நிலையில் ரசிகைகள் தொடர்ந்து திருமணம் எப்போது என்று கேட்டு வரும் வேளையில் இவருக்கு தகுந்த பெண்ணை கடந்த பல ஆண்டுகளாக இவரது பெற்றோர்கள் தேடி வருகிறார்கள்.
ஆனால் எதுவும் செட் ஆகவில்லை. இதனை அடுத்து வெந்து தணிந்தது காடு பட விழாவில் இது பற்றி சூசகமாக சிம்பு பேசி இருந்த விதம் அனைவரையும் கவர்ந்தது.
இதனை அடுத்து சிம்புவின் அப்பா சென்னையில் இருக்கும் கோவில் ஒன்று சிம்புவின் ஜாதகத்தை வைத்து பூஜை நடத்தி அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து அவர் திருமணம் பற்றி பேசி இருக்கிறார்.
இதில் சிம்புவுக்கு ஏற்ற பெண்ணை நான் தேர்வு செய்வதை விட, என் மனைவி உஷா தேர்வு செய்ததை விட, எங்கள் இல்லத்துக்கு ஏற்ற மருமகளை இறைவன் தேர்வு செய்து கொடுத்தால் தான் சிம்புவுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்ற கருத்தை அவர் வெளியிட்டு இருக்கிறார்.
இதன் மூலம் ஆண்டவனின் அனுக்கிரகம் மூலம் விரைவில் நடிகர் சிம்புவுக்கு திருமணம் நடக்க வேண்டும் என்று அனைத்து ரசிகர்களும் இறைவனைப் பிரார்த்தித்து வருவதால் விரைவில் அவர்கள் வீட்டில் டும் டும் டும் நடக்கும் என்ற நம்பிக்கையில் இவர்கள் காத்திருக்கிறார்கள்.