நடிகர், இயக்குனர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் என்று பன்முகத் திறமை கொண்ட டி ராஜேந்திரனின் மகனான சிலம்பரசன் என்கிற சிம்பு லிட்டில் சூப்பர் ஸ்டார் ஆன இவர் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி இன்று வளர்ந்த நடிகராகிவிட்டார்.
இவரும் கமலஹாசனை போலவே பலவிதமான கலைகளை கற்றுக் கொண்டு சினிமாவுக்கு வந்தவர் என்று கூறும் அளவுக்கு புத்திக்கூர்மையும் ஆற்றலும் படைத்தவர். சினிமாவின் என்சைக்ளோபீடியா என்று இவரை நாம் அழைக்கலாம்.
இவருக்கு தெரியாத விஷயங்களை எதுவும் இல்லை என்று கூறும் அளவுக்கு அத்தனை விஷயங்களையும் கற்றுத் தேர்ந்தவர். எதையும் வெளிப்படையாக பேசும் தன்மை கொண்டதால் இவரது வாழ்க்கையை இவரை அழித்து கொண்டார் என்று கூறுமளவுக்கு பல சிக்கல்களில் சிக்கித் தவித்து இடையில் மிகவும் சிரமப்பட்டார்.
இதனையடுத்து திரைத்துறையில் இனி சிம்புவால் எதுவும் சாதிக்க முடியாது. முடிந்துவிட்டது… இனி அவரால் எழுந்திருக்கவே முடியாது என்று நினைத்தவர்களின் முன்னால் இவர் மீண்டும் சாதித்துக் காட்டியிருக்கிறார்.
மாநாடு படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்த சிம்பு தற்போது வெந்து தணிந்தது காடு படத்தின் மூலம் வெற்றி அடைந்ததை தொடர்ந்து இவரது ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.
மேலும் சிம்பு தற்போது தமிழ் திரைத் துறையில் அசைக்க முடியாத சிம்மாசனத்தில் தான் அமர்ந்திருப்பதை காட்டிவிட்டார்.
மேலும் இவர் தற்போது நடித்து வரும் பத்து தல படத்தில் கமல்ஹாசனை போல பல்வேறு கெட்டப்புகளில் இவர் நடித்திருப்பதாக காற்றுவாக்கில் செய்திகள் வந்த வண்ணம் உள்ளது.
நீண்ட நாட்களாகவே இந்த படத்தைப் பற்றிய விஷயங்கள் அனைத்தும் பரம ரகசியமாக பாதுகாக்கப்பட்டு வருவதால் இதுவரை அந்த படத்தில் என்னென்ன எப்படி என்பது யாருக்குமே தெரியாது.
தற்போது இந்தப் படத்தில் சிம்பு 10 வேடத்தில் தசாவதார கமலஹாசனை போல் நடித்திருக்கிறார் என்ற செய்தி வந்திருப்பது ரசிகர்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தையும் அளிக்கிறது.
இதையடுத்து வந்துட்டேன்னு சொல்லு திரும்ப வந்துட்டேன்னு சொல்லு என்பது போன்ற வசனங்களை வீராவேசமாக பேசி சிம்புவை உற்சாகப் படுத்துவதோடு புதிய படத்தின் வரவுக்காக காத்து இருக்கிறார்கள்.