“சிம்புவை வித்தியாசமாக பழிவாங்கிய நயன்தாரா..” விவரம் தெரியாமல் வலையில் சிக்கிய டிஆர்..!

நடிகை நயன்தாரா மற்றும் நடிகர் சிம்புவுக்கு இடையே இருக்கும் உறவு என்ன என்று சொல்லித்தான் தெரிய வேண்டும் என்ற அவசியம் கிடையாது. இந்நிலையில் நடிகை நயன்தாராவுக்கு சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவன் உடன் திருமணம் நடந்தது.

முன்னதாக சிம்புவுக்கும் நயன்தாராவுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சிம்புவை விட்டு நயன்தாரா பிரியும்போது சிம்புவை பழிவாங்கும் நோக்கத்தில் உன்னுடைய நெருங்கிய நண்பரை ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொள்வேன் என்று சிம்புவிடம் நயன்தாரா சவால் விட்டதாக சில தகவல்கள் வெளியாகின.

அதற்கேற்ப நடிகர் சிம்புவின் நெருங்கிய நண்பரான விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இது ஒரு பக்கம் இருக்க நடிகர் சிம்புவை கடுப்பேற்ற வேண்டும், பழிவாங்க வேண்டும் என்ற காரணத்தினால் தன்னுடைய திருமண பத்திரிக்கையை சிம்புவின் தந்தை டி ராஜேந்தர் இடம் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் ஜோடியாக சென்று பத்திரிக்கை கொடுத்துள்ளனர்.

இதற்கு முக்கிய காரணம் தனது திருமணம் குறித்த தகவல்கள் சிம்புவுக்கு தெரிய வேண்டும் என்பதே அவரது திட்டம் மேலும் திருமணத்திற்கு கண்டிப்பாக வருவதாக இயக்குனர் டி ராஜேந்தர் உறுதியளித்துள்ளார்.

இதனை கேள்விப்பட்ட நடிகர் சிம்பு என்னை பழிவாங்க தான் அப்பாவிடம் பத்திரிக்கையை கொடுத்துள்ளதாக கூறினாராம். ஆனால் அது தெரியாமல் பத்திரிக்கையை அப்பா பெற்றுக் கொண்டார் என்று புலம்பி தவித்து உள்ளார்.

எது எப்படியோ நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்துவிட்டது. இனி அவரவர் வேலையை பார்த்துக் கொண்டு அவர்களுடைய பாதையில் பயணிப்பது தான் இருவரும் எதிர்காலத்திற்கும் சிறப்பானதாக இருக்கும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் நடிகர் சிம்புவும் இந்த வருடம் திருமணம் செய்து கொள்வார் என்ற தகவல்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …