” உங்கள் வீட்டு தரையில் அதிகளவு எறும்பு தொல்லை, ஈ தொல்லை இருக்கிறதா..! ” – படா பட் அதை நீக்க இந்த மூன்று பொருள் போதும்..!

 இன்று பெரும்பாலான வீடுகளில் டைல்ஸ் ஆதிக்கம் அதிக அளவு இருப்பதால் அந்த தரையை தினமும் சுத்தப்படுத்தா விட்டாலும் வாரத்தில் இரண்டு முறையாவது சுத்தப்படுத்துவதை வழக்கமாக அனைவரும் மேற்கொண்டு வருகிறார்கள்.

 வாரத்தில் இரண்டு முறை மட்டும் நாம் தரைகளை துடைப்பதால் தரைகளில் போன்றவை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஏனென்றால் குழந்தைகள் உண்ணும் பொருட்களை அங்கும் இங்கும் ஆக சிந்தி சாப்பிடுவதோடு மட்டுமல்லாமல் எந்த இடத்தில் அதை அப்படியே போட்டுப் போகிறார்கள் என்பதும் தெரிவதில்லை.

 வீட்டில் வேலை செய்யும் பெண்கள் எடுத்த பொருட்களை அப்படியே அந்த இடத்தில் வைப்பதற்கு நேரம் இல்லாமல் தடுமாறி வரக்கூடிய சூழ்நிலையில் எறும்புகள் மட்டுமல்ல ஈக்களின் தொல்லையும் அதிகரித்து உள்ளது என்று தான் கூற வேண்டும்.

 எனவே உங்கள் வீட்டில் எறும்பு, ஈக்களின் தொல்லை அதிகமாக இருந்தால் இந்த மூன்று பொருட்களைக் கொண்டு நீங்கள் உங்கள் தரைகளை துடைத்தாலே போதும் தரை பளிச்சிடுவதோடு மட்டுமல்லாமல் எறும்பு மற்றும் ஈக்களின் தொல்லைகளிலிருந்து விடுபடலாம்.

எறும்பு மற்றும் ஈக்களின் தொல்லைகளில் இருந்து விடுபட

👍உங்கள் வீட்டு தரைகளில் சின்ன சின்ன கண்ணுக்குத்  தெரியாத சிற்றெறும்புகள் ஓடிக்கொண்டு இருந்தால் நீங்கள் அதை உடனே அகற்றுவதற்கு இந்த பொருட்களைக் கொண்டு இரண்டு நாட்கள் மட்டும் துடைத்தாலே போதும் எளிதில் எறும்புகள் வராது.

👍 அதற்காக நீங்கள் லைசால் அல்லது வேறு ஏதேனும் தரை கிளீனர் கொண்டு வீட்டை துடைக்கும் பட்சத்தில் அந்த ஃப்ளோர் கிளீனர் உடன் இரண்டு சூடம், சிறிதளவு உப்பு,  கடுக்காய் பொடி இவற்றை நன்கு கலந்து துடைத்து பாருங்கள்.

👍 இந்த மூன்று பொடிகளையும் நீங்கள் பயன்படுத்துவதால் கடுக்காயில் கசப்புத் தன்மை இருப்பதால் எறும்புகள் எட்டிப் பார்க்காது. மேலும் கொசுக்களும் சிறிய பூச்சிகளும் சூடம் மற்றும் உப்பின் வாசத்தை நுகர முடியாமல் நம் வீட்டுக்குள் வருவதற்கு அஞ்சும்.

👍 இந்த ட்ரிக்கை நீங்கள் ஃபாலோ செய்து செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் உங்கள் தரைகளை சுத்தப்படுத்தும் போது இதை செய்து வந்தால் கட்டாயம் அந்த வாரம் முழுவதும் உங்களுக்கு பூச்சிகளாலோ எலும்புகளாலோ கட்டாயம் தொல்லை ஏற்படாது.

 நீங்களும் இந்த ட்ரிக்கை முயற்சி செய்து பார்த்து உங்களது பலனை எங்களுக்கு தெரிவிக்கலாம்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …