சிம்ரன் [Simran] என்றாலே 90களில் இளைஞர்களுக்கு ஒரு கிரஷ் இருந்தது என்று கூறலாம். அந்த அளவு தன்னுடைய நடிப்பு மற்றும் நடனத் திறமையின் காரணமாக இளசுகளை கட்டி போட்ட பெருமை நடிகை சிம்ரனுக்கு உண்டு.
கனவு கன்னியாக தமிழ் திரை உலகில் ஜொலித்த சிம்ரன் 1997 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த ஒன்ஸ்மோர் என்ற திரைப்படத்தில் தான் அறிமுக நாயகியாக அறிமுகம் செய்யப்பட்டார்.
முதல் படத்திலேயே தனது அபார திறமையை நிரூபித்த இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. அந்த வகையில் தமிழில் முன்னணி நாயகர்களாக திகழக்கூடிய நடிகர்களோடு இவர் இணைந்து நடித்திருக்கிறார்.
Simranஅந்த வரிசையில் நேருக்கு நேர், நட்புக்காக, துள்ளாத மனமும் துள்ளும், வாலி, ஜோடி, பிரியமானவளே போன்ற வெற்றி படங்களை கொடுத்த முன்னணி கதாநாயகியாக இவர் திகழ்ந்தார்.
இதனை அடுத்து சிம்ரன் 2003 ஆம் ஆண்டு தீபக் வாகா என்பவரை திருமணம் செய்து கொண்டு குடும்பம் குட்டி என்று செட்டிலாகி விட்டார். மேலும் தற்போது இவர் திரைப்படங்களில் குணச்சித்திர நடிகையாக நடித்து வருகிறார்.
#image_titleஇச்சூழ்நிலையில் தற்போது சர்ச்சையை கிளப்பும்படி பயில்வான் ரங்கநாதன் வெளியிட்டு இருக்கக்கூடிய கருத்தானது ரசிகர்களின் மத்தியில் மாபெரும் அதிர்வலையை ஏற்படுத்தி விட்டதில் என்று கூறலாம்.
அது எப்படிப்பட்ட விஷயம் என்று நீங்கள் யூகிப்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும். அவர் கூறிய கருத்து என்னவென்றால் உலக நாயகன் கமலஹாசனோடு நடிகை சிம்ரன் நீண்ட நாளாக உறவில் இருப்பதாக கூறிய அந்த விஷயம் தான் தற்போது தீயாய் பரவி வருகிறது.
#image_titleஇதனை கேள்விப்பட்ட ரசிகைகள் மட்டுமல்லாமல் திரை உலகை சார்ந்தவர்களும் அட.. சீ.. என்று கழுவி ஊற்றி இருக்கிறார்கள். மேலும் கமலஹாசன் பற்றி அனைவருக்குமே நன்றாக தெரியும் என்பதால் இந்த விஷயம் உண்மையாக இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என்று கோடம்பாக்கமே பேசி வருகிறது.
பத்தல பத்தல குட்டியும் பத்தல புட்டியும் பத்தல மத்தளம் அட்றா டேய்… என்ற பாடல் வரிகளை நேசிக்க கூடிய வகையில் தான் ஆண்டவர் கமலஹாசனின் செயல்கள் உள்ளது என்று நாம் கூறலாம்.
#image_titleஇன்னும் சில பேர் மேலும் ஒரு படி சென்று உலகநாயகன் என்ற பெயருக்கு பதிலாக காதல் நாயகன் என்ற பெயரை இவருக்கு பொருந்தும் என்று கூறியிருக்கிறார்கள்.