மறைந்த தன் மகளுக்கு மறக்காமல் பிறந்த நாள் வாழ்த்து சொன்ன பாடகி சித்ரா…!மனதைப் பிழியும் சோகம்…!!

 பின்னணி பிரபல பாடகியான பாடகி சித்ராவின் மகள் இறந்த விஷயம் அனைவரும் அறிந்ததே. அந்த குழந்தையின் பிறந்த நாளன்று உருக்கமான பதிவினை ஒன்று போட்டு அனைவரின் இதயத்தையும் பிழியக்கூடிய சோகத்தை பாடகி சித்ரா ஏற்படுத்திவிட்டார்.

எவ்வளவுதான் பணம் இருந்தாலும், பெயர் இருந்தாலும், உண்மையான சந்தோஷம் என்பது மழலைகள் மூலம் மட்டுமே கிடைக்கும் என்பது  உண்மைதான். இதனால் தான் யாழ் இனிது, குழல் இனிது என்பார்கள்… மழலை சொல் கேளாதோர் இயன்ற அற்புதமான உவமை உள்ளது.

 நமக்குள் எவ்வளவு சங்கடங்கள், சலிப்புகள் இருந்தாலும் அவற்றை ஒரு நொடியில் தூக்கி எறிகின்ற மனப்பக்குவம் நம் குழந்தைகளை பார்க்கும் போதும் அந்த குழந்தை வயதில் இருப்பவரோடு இணங்கி செயல்படும்போது நமக்கு கண்டிப்பாக அந்த உணர்வு கிட்டும்.

 பெற்றால் தான் பிள்ளையா… என்ற வார்த்தையை நாம் அசால்டாக கூறினாலும் பெற்ற பிள்ளையை இழந்தவருக்கு தான் அதன் வலி என்ன என்பது நிதர்சனமாக புரியும்.

அப்படி ஒரு குழந்தையை பெற்று இழந்த நிலையில் இருப்பவர்தான் பாடகி சித்ரா.இவர் பிரபல தொழிலதிபர் விஜய் சங்கர் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் 15 ஆண்டுகளுக்கு பிறகு பிறந்த குழந்தைதான் நந்தனா.

 பாசத்தை கொட்டி வளர்த்த இந்த மகளை 2011 ஆம் ஆண்டு துபாயில் நடந்த இசைக்கச்சேரி ஒன்றுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அந்த நிலையில்  அவர் துபாயில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் ரூம் எடுத்து தன்னுடைய மகளோடு தங்கிய நிலையில் குழந்தை ஹோட்டலில் இருந்த நீச்சல் குளத்தில் எதிர்பாராத விழமாக விழுந்து உயிரிழந்தது.

மேலும் எட்டு வயதான தனது மகளை இழந்த துயரத்தில் இருந்து இன்றுவரை மீண்டு வருவதற்கான வாய்ப்புகளே இல்லாத நிலையில் தனது குழந்தையின் பிறந்த நாள் பதிவினைப் போட்டு அனைவரது நெஞ்சையும் கலங்க வைத்து இருக்கிறார் பாடகி சித்ரா.

 அந்தப் பதிவில் அவர் எத்தனை ஆண்டுகள் சென்றாலும் ஒரு போதும் வயதாகி விடாது. நீங்கள் தொலைவில் இருந்தாலும் நான் உங்களை எப்போதும் போல் நேசிக்கிறேன். அதுமட்டுமில்லாமல் உன்னை இன்று நான் நினைத்து பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறுகிறேன் என்ற பதிவை போட்டு வைரலாக்கிவிட்டார்.

 இந்த பிறந்த நாளை நீங்கள் சொர்க்கத்தில் தேவதைகளோடு கொண்டாடுங்கள் என்று அவர் போட்டிருக்கும் வாக்கியங்களை படித்த அவர் அனைவரின் கண்களிலும் தண்ணீர் வந்துவிட்டது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …