“பீரியட்ஸ்ன்னு கூட பாக்காம.. அந்த நேரத்தில் அதை பண்ணார்..” – சம்யுக்தா வெளியிட்ட பகீர் தகவல்..!

பிரபல சின்னத்திரை நடிகை சம்யுக்தா ( Sippikkul Muthu Samyuktha ) நடிகர் விஷ்ணுகாந்தை பிரிவதற்கான காரணத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் தளத்தில் பதிவு செய்திருக்கிறார். இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

திருமணம் முடிந்த சில வாரங்களே ஆகியிருக்கும் நிலையில் தன்னுடைய கணவரை விவாகரத்து செய்வது பற்றி பேசி இருக்கிறார். சமீபத்தில் தங்களுடைய பிரிவு குறித்து விஷ்ணுகாந்த் விளக்கம் ஒன்றை கொடுத்திருந்தார்.

அதில், விஷ்ணுகாந்த் கூறியதெல்லாம் பொய் என கூறியிருக்கிறார் நடிகை சம்யுக்தா. விஜய் டிவியில் ஒளிபரப்பான சிப்பிக்குள் முத்து என்ற சீரியலில் ஒன்றாக நடித்து காதல் வயப்பட்ட இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

கடந்த மார்ச் மாதம் தர்ப்பணம் முடிந்தது நிலையில் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்திருக்கின்றனர். இருவரும் தங்களுக்கு உண்டான திருமுறை புகைப்படங்கள் மற்றும் தங்களுக்குள் பரிமாறி கொண்ட புகைப்படங்களை இணைய பக்கங்களிலிருந்து டெலிட் செய்திருக்கின்றனர்.

Sippikkul Muthu Samyuktha

இந்நிலையில், இருவரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் புகார் கூறிக்கொண்டு வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். இதற்கு முன்பு சூசகமாக தங்களுக்குள் இருக்கும் மனக்கசப்பை இணையம் பக்கங்களில் பதிவு செய்து வந்தனர்.

இந்நிலையில், வெளிப்படையாக தற்பொழுது சண்டை போடத் தொடங்கி இருக்கின்றனர். பிரிவது என்ற முடிவுக்கு வந்து விட்ட பிறகு இருவரும் பேசி பிரிந்து விடலாமே அதற்காக இப்படி ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டு உங்களை நீங்களே அசிங்கப்படுத்தி கொள்கிறீர்கள் என்று கருத்துக்களை பதிவு செய்யும் ரசிகர்கள் ஒரு பக்கம் இருக்கிறார்கள்.

Sippikkul Muthu Samyuktha

ஆனால் தங்களுக்கு உண்டான நியாயம் வேண்டிய இருவரும் பொதுவெளியில் இப்படியான கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். இவர்கள் கூறுவது யார் பக்கம் நியாயம் இருக்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்று கருத்து பதிவிடும் ரசிகர்களும் இருக்கவே செய்கிறார்கள்.

பொதுவாக பிரபலங்கள் என்றாலே அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை ஏதேனும் சறுக்கலை சந்திக்கும்போது அது செய்தியாவதும் அதை இணைய பக்கங்களில் வைரலாவதும் வாடிக்கையாக நடந்து வருகிறது.

Sippikkul Muthu Samyuktha

அந்த வகையில், தற்பொழுது சீரியல் நடிகை சம்யுக்தா விஷ்ணுகாந்த் விவகாரம் சமூக வலைதளங்களில் அடிபட்டுக் கொண்டிருக்கின்றது. இது குறித்து அவர் கூறியதாவது, என்னுடைய விருப்பப்படி என்னுடைய திருமணத்தில் எதுவும் நடக்கவில்லை.

நான் எல்லாவற்றையும் விஷ்ணுகாந்திற்க்காக ஏற்றுக் கொண்டேன். திருமண செலவுகளை விஷ்ணுகாந்தான் செய்தார். அதனால் அவருக்கு பிடித்த மாதிரி திருமண அழைப்பிதழ்களை அடித்தார்கள். அது பழைய மாடலாக இருக்கிறது என்று நான் என்னுடைய வேலை பார்க்கும் நண்பர்களுக்கு கொடுப்பதாக கொடுப்பதற்காக வேறு இன்விடேஷன் அடித்திருந்தேன்.

Sippikkul Muthu Samyuktha

அதனால், அப்போதே பிரச்சனை வந்தது திருமணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பு என்னுடைய போன் காலை விஷ்ணுகாந்த் எடுக்காமல் தவிர்ந்து விட்டார். இரண்டு நாட்கள் முழுக்க அவருக்கு நான் போன் செய்து பார்த்தேன்.

ஆனால், எடுக்கவில்லை வீட்டிலும் போய் பார்த்தேன். விஷ்ணுகாந்த் வீட்டில் இல்லாத நாள் நான் அப்போதே கம்ப்ளைன்ட் கொடுத்திருந்தேன். பிறகு சமாதானமாகி ஒரு வழியாக திருமணம் நடந்தது என பதிவு செய்திருக்கிறார்.

Sippikkul Muthu Samyuktha

இதன் மூலம் திருமணத்திற்கு முன்பே இவர்கள் இருவருக்கும் மனக்கசப்பு இருந்திருப்பது தெரிய வந்திருக்கிறது. இந்நிலையில், சிறு சிறு பிரச்சனைகள் கூட எதற்கெடுத்தாலும் வீட்டை விட்டு போய்விடு என சண்டை போட்டுக் கொண்டிருந்தார் விஷ்ணுகாந்த்.

கடைசியாக நான் பீரியட்ஸில் இருந்த பொழுது எனக்கு வலி அதிகமாக இருந்தது. அப்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் இருப்பவர்களுக்கு கூட தெரியும் நான் அந்த அளவுக்கு வலியால் துடித்து இருக்கிறேன்.

Sippikkul Muthu Samyuktha

அந்த நிலையில், என்னை விட்டு வைக்காமல் என்னை என்னோட அப்பாவோடு கிளம்ப சொல்லிவிட்டார். நான் என்னுடைய காரை சர்வீஸ் விட்டு விட்டேன் நீ வீட்டை விட்டு போனால் தான் நான் வாங்க முடியும் என்று அப்போது என்னை திட்டினார்.

நான் வேதனையில் வீட்டை விட்டு கிளம்பினேன். இதை கூட லைவில் நான்கு பேரை வைத்து வேவு பார்த்துக் கொண்டிருக்கிறார். நான் என்ன பேசுகிறேன் என்பதெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

Sippikkul Muthu Samyuktha

ஆனால், அதற்கு நான் பதில் சொல்லவில்லை. அவர் மீது தப்பில்லை என்றால் நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டியது தானே என கூறியிருக்கிறார். இவருடைய இந்த விவகாரம் இணைய பக்கங்களில் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …