நடிகன் சிவகார்த்திகேயன் என்று அழைக்க கூடிய வகையில் உயர்ந்து இருக்கக்கூடிய சிவகார்த்திகேயன் ஆரம்பகட்டத்தில் சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்தவர். இவர் விஜய் டிவியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக ஆரம்ப காலங்களில் பணிபுரிந்து வந்தார்.
குழந்தைகள் இருந்து பெரியவர்கள் வரை என இவருக்கு தனியாக ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இவரை எல்லாரும் தங்கள் வீட்டுப் பிள்ளையாக தான் நினைக்கிறார்கள். அதுவும் இவரது வளர்ச்சிக்கு ஒரு முக்கிய காரணி என்று கூறலாம்.
இவர் நடிப்பில் வருகின்ற படங்களில் இவர் நடிப்பு,நடனம், காமெடி, ரொமான்ஸ் ஆக்ஷன் என எல்லாம் கலந்த கலவையாக இருப்பதால் இவர் படத்தை அனைவரும் ரசித்துப் பார்க்கிறார்கள்.
சிவா சமீபத்தில் நடித்து வெளிவந்த டான்,டாக்டர் போன்ற படங்கள் சுமார் 100 கோடிக்கு மேல் வசூல் செய்ததோடு இவரது படம் மக்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்றது.
இப்போது இவர் அதிதி சங்கரோடு இணைந்து மாவீரன் எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படமானது ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த படத்தில் மிகவும் வித்தியாசமான வேடத்தில் ஏதோ ஒரு விஷயத்தை சொல்லுவது போல் படம் அமைக்கப்பட்டு இருக்கிறதாம்.
2012 ஆண்டு சிவகார்த்திகேயன் நடித்த முதல் படமான மெரினா பட புரமோஷனுக்கு இவர் விஜய் டிவியில் வேலை செய்ததை காரணமாகி பிரபல தொலைக்காட்சி அவரை அழைக்காமல் ஒதுக்கித் தள்ளியது.
ஆனால் தற்போது ஒதுக்கித் தள்ளிய சேனல்கள் அனைத்தும் தற்போது இவரின் பேட்டிக்காக காத்து கிடைக்கிறது. ஆனால் அவரோ இன்றுபல முன்னணி ஹீரோக்களின் திரைப்பட விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு தனது கெத்தை வேற லெவலில் வெளிப்படுத்தியிருக்கிறார்.
மேலும் தன்னை அவர்களுக்கு எதிராக இருக்கக்கூடிய சேனலில் பணிபுரிய புரிந்த ஒரே காரணத்தை முன்னிட்டு முதல் பட புரமோஷன் நிகழ்வுக்கு அழைக்காத காரணத்தால் சோர்ந்துவிடாமல் இன்று அனைவரும் காத்துக் கிடக்கின்ற வாறே தன் வளர்ச்சியால் பதிலடி கொடுத்து இருக்கின்ற சிவகார்த்திகேயனின் உழைப்புக்கு நாம் சல்யூட் செய்ய வேண்டும்.
இவர் நடிகர் என்ற ஒரு பக்கத்தை விட்டு தயாரிப்பாளர் என்ற மறு அவதாரம் எடுத்து இருப்பது இவரை போன்று திரைத்துறையில் வர வேண்டும் என்று துடிக்கும் இளைஞர்களுக்கு பாதை அமைத்துக் கொடுப்பார் என்பதை உறுதி செய்திருக்கிறது.