வழக்கு எண் 18/9 முதலில் நடிக்க இருந்தது சிவகார்த்திகேயன்… கைவிட்டுப் போன தேசிய விருது…!!

விஜய் டிவியில் இருந்து கடுமையான முயற்சி மற்றும் உழைப்பை மேற்கொண்டதன் மூலம் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களின் வரிசையில் தற்போது தனக்கு என்று ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கும் நடிகர் தான் சிவகார்த்திகேயன்.

 இவர் வெள்ளித் திரையில் கால் பதித்த நாள் முதல் கொண்டு தொடர்ச்சியாக பல ஹிட் படங்களை கொடுத்து சினிமாவில் வேகமாக வளர்ந்து வருகிறார் என்று கூறலாம்.

தனது பன்முக திறமையை அடிப்படையாகக் கொண்டு திரை உலகில் கலக்கி வரும் இவர் வேலைக்காரன் படத்தை தொடர்ந்து சீம ராஜா படத்தில் நடித்திருக்கிறார்.மேலும் ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு சயின்ஸ் பிக்சன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

 தமிழ் சினிமாவில் இவர் நடிக்க வந்த புதிதில் எந்த ஆடிசனுக்கும் சென்றதே இல்லையாம். ஆரம்பத்தில் இவருக்கு வழக்கு எண் 18/9 என்ற படத்தில் ஸ்ரீ கேரக்டரில் நடிப்பதற்காக முதலில் சிவகார்த்திகேயன் தான் தேர்வு செய்து வைத்திருந்தார்களாம்.

 இதனை அடுத்து இவருக்கு சில  மாறுபாடான சூழ்நிலை அமைந்ததின் காரணத்தினால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது .இதனை அடுத்து சிவா எந்த படத்தில் நடித்திருந்தார் நிச்சயம் இன்னும் வளர்ந்திருப்பார் என அனைவரும் கூறுகிறார்கள்.

 மேலும் இந்த படம் தேசிய விருது வாங்கியது அதையும் சிவகார்த்திகேயன் தவறவிட்டார் என்று திரையுலகத்தில் இருப்பவர்கள் தற்போது பேசி வருவது பரவலாக தெரிய வந்துள்ளது.

இதனை அடுத்து எது, எது எப்போது யாருக்கு கிடைக்க வேண்டுமோ அது அப்போது அவர்களுக்கு மட்டும்தான் கிடைக்கும் என்ற ரீதியில் தான் திரைத்துறை மட்டுமல்லாமல் இந்த உலகமே இயங்குகிறது என்ற தத்துவத்தை சிலர் கூறி வருகிறார்கள்.

 இதனை அடுத்து தற்போது தீபாவளியன்று வெளிவந்த பிரின்ஸ் திரைப்படம் இவருக்கு சரியாக கை கொடுக்காத நிலையில் தற்போது மாவீரன் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ள நிலையில் இந்த படம் இவருக்கு கை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

மேலும் இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக பிரமாண்ட இயக்குனர் என்று அழைக்கப்படும் சங்கரின் மகள் அதிதி இணைந்து நடித்திருக்கிறார்.

எனவே இந்த படம் பட்டையை கிளப்பி இவருக்கு வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கும் ரசிகர்களுக்கு இது எப்படி இருக்கும் என்பது படம் வெளிவந்த பின்பு தான் தெரியவரும்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …