இளம் நடிகர் சிவகார்த்திகேயன், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். ஏ.ஆர் முருகதாஸ் தயாரிப்பில், பொன்குமார் இயக்கிய ஆகஸ்ட் 16, 1947 படம், வரும் ஏப்ரல், 7ம் தேதி ரிலீஸ் ஆகிறது.
இதில், ஹீரோவாக கவுதம் கார்த்திக் நடித்திருக்கிார். இப்படத்தின் இசை வௌியீட்டு விழா, சமீபத்தில் சென்னையில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சிவகார்த்திகேயன், மிக யதார்த்தமாக தன் உணர்வுகளை வெளிப்படுத்தி பேசினார்.
சுதந்திர போராட்ட காலத்தை, மையப்படுத்தி இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது என்றால், இது மிக சவாலான படம்தான். தான் இயக்கும் முதல் படத்திலேயே சவாலை சந்திக்க தைரியம் வேண்டும். அந்த வகையில், படத்தின் இயக்குநர் பொன்குமாரை பாராட்டுகிறேன். ஏனென்றால், வெற்றியை, செய்யும் தொழில் தீர்மானிக்கிறது. நமது கேரக்டர்தான் வாழ்க்கையை தீர்மானிக்கிறது.
சினிமாவில், யாருடைய சாயலும் இல்லாமல் நடிக்க முடியாது, என் நடிப்பில் கூட பாதி ரஜினி சாயலை காண முடியும். இது உண்மைதான். ஆனால், நடிகர் கார்த்திக் நடிப்பில், யாருடைய நடிப்பும் தெரியாது. அவரது நடிப்பு தனித்துவமானது.
கவுதம் கார்த்திக்கை சந்தித்த பிறகுதான், கார்த்திக் சாரை நேரில் சந்தித்தேன். அவருக்கே உண்டான பாணியில், ‘ஹாய் டார்லிங், ஹவ் ஆர் யூ’ என்றார். அவருடைய ஸ்வீட்தான் கவுதம்.
கவுதம், பெரிய நடிகரின் மகன் என்ற எண்ணம் இல்லாமல், எளிமையாக நடந்துகொள்கிறார். அவரது திருமண ஏற்பாடுகளை அவரே, பொறுப்பெடுத்து செய்துகொண்டார்.
ரொம்பவும் ஸ்வீட்டான மனிதர் கவுதம். டார்லிங், ரொம்ப ஸ்வீட் நீங்க…உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும். உங்களது திருமண வாழ்க்கை, இன்னும் பல வெற்றிகளை கொண்டு வரும்.
தான் மட்டுமின்றி, தன்னை சார்ந்தவர்களும், நன்றாக இருக்க வேண்டும், வெற்றி பெற வேண்டும் என நினைப்பவர் இயக்குநர் முருகதாஸ். முருகதாஸ் தயாரித்த ‘எங்கேயும் எப்போதும்’ படத்துக்கு, தொகுப்பாளராக இந்த இடத்தில் நின்றேன். இப்போது, அவர் தயாரித்த இந்த படத்துக்கு, சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டிருப்பது பெருமை தருகிறது, என்றார் சிவகார்த்தியேகன்.