மனைவி போட்ட கண்டிஷன்..! – பக்குவமாக பாலோவ் பண்ணும் கார்த்தி..! – கடுப்பில் சிவக்குமார்..!

சினிமா குடும்பம் என்றாலே கூத்தாடிகள் நிறைந்த குடும்பம் இது சரியாக இருக்காது என்று எண்ணுவர்களின் மத்தியில் நல்லதோர் குடும்பம் பல்கலைக்கழகம் என்று  நினைத்துக் கொள்ளும் விதமாக தனது குடும்பத்தை அமைத்துக் கொண்டவர் நடிகர் சிவகுமார்.

இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் இருப்பது அனைவருக்கும் தெரியும் இந்த இரண்டுமே தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக இருப்பவர்கள்.

இரண்டாவது மகனான கார்த்தி தன் அப்பாவின் விருப்பத்திற்கு ஏற்ப சொந்தத்தில் பெண் பார்த்து திருமணம் செய்து கொண்டது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

மேலும் அவரும் கார்த்தியோடு இணைந்து குடும்பப்பாங்கான முறையில் குடும்பம் நடத்தி வருவது நடிகர் சிவகுமாருக்கு மிகப்பெரிய ஆறுதலான விஷயமாக அமைந்தது.

இதனை அடுத்து தற்போது சிவக்குமார் வீட்டில் வெடித்திருக்கும் பிரச்சனை மிகப் பெரியது. இதனால் இழப்பு என்னவோ அவர்களின் குடும்பத்திற்கு தான்.

 ஒருபுறம் தனது மூத்த மருமகள் தனது மூத்த மகனை அப்படியே மும்பையில் செட்டில் ஆகி பிரிந்து சென்று விடுவார்களோ என்று கடுப்பில் இருந்த வேளையில் தற்போது இரண்டாவது மருமகள் தனது இரண்டாவது மகனிடம் கண்டிஷன் போட்டு அதிர வைத்திருக்கிறார்.

 இதனை அடுத்து கார்த்தி எந்த ஒரு படத்திலும் நடிகைகளுடன் மிக நெருக்கமாக நடிக்கக்கூடாது. மேலும் முத்தக் காட்சிகள் அதில் இடம் பெறக்கூடாது என்பது போன்றவை தான் அதில் உளக முக்கியமான கண்டிஷன்.

 சினிமா வேறு குடும்ப வாழ்க்கை வேறு என்று இவர் தன் மனைவியிடம் தற்போது எடுத்துரைத்து வந்தாலும் குடும்பத்தில் சலசலப்பு ஏற்படாமல் இருப்பதற்காக தன் மனைவியின் கண்டிஷனை ஏற்றுக் கொண்டுதான் அவர் இதுவரை நடித்து வந்திருக்கிறார்.

 எனவே தான் இவரது படங்களில் கதாநாயகிகளில் விட்டு சற்று விலகியே டான்ஸ் ஆனாலும் ரொமான்ஸ் ஆனாலும் இருக்கும். எனினும் இவர் கதாநாயகிகளோடு இணைந்து நடிக்கும் பாடல்கள் பெரும் வெற்றியை இவருக்கு தேடித் தந்து விட்டதால் தற்போது கைதி 2 படத்திலும் அதே நிலையில் தொடர வேண்டும் என்று அவர் மனைவி வலியுறுத்தி வருகிறாராம்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …