பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன்… என்ற பாடலின் மூலம் பத்தி தொட்டி எங்கும் இருக்கும் இளைஞர்களின் மனதில் டென்ட் போட்டு அமர்ந்தவர் தான் புன்னகை அரசி சினேகா.
இவரது புன்னகை முன் எதுவும் நிக்காது என்று கூறும் அளவுக்கு தன் அழகிய சிரிப்பால் இளைஞர்களை மட்டும் அல்லாமல் அனைவரையுமே கட்டி இழுத்தவர். தமிழ் திரை உலகில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு என்று தென்னிந்திய மொழிகளில் படு பிஸியாக நடித்து முன்னணி நடிகைகளின் வரிசையில் ஒருவராக திகழ்ந்தவர்.
தமிழ் திரை உலகில் விஜய், சூர்யா, கமல் போன்ற பல நட்சத்திரங்களுடன் ஜோடியாக நடித்த இவர் 2012 ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைகளுக்கு தாயாகி இருக்கிறார்.
சினிமாவில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் சின்னத்திரைகளில் சில ரியாலிட்டி ஷோகளில் நடுவராக பங்கேற்று வரும் இவருக்கு பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் இருப்பதால் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு பிஸியாக இருப்பதோடு அடிக்கடி நடக்கும் நிகழ்வுகளை புகைப்படங்களாகவோ, வீடியோக்களாகவோ வெளியிடுவார்.
அந்த வரிசையில் தற்போது வெளியிட்டிருக்கின்ற புகைப்படத்தில் இவரது அழகு எடுப்பாக தெரிகிறது. அதுவும் விரசமில்லாமல் இவர் வெளியிடுகின்ற புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் ஆழப் பதிந்து விடுகிறது.
அந்த அளவு கூடுதல் அழகோடு இருக்கக்கூடிய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அனைவரும் இவருக்கு கூடுதலாக லைக்குகளை போட்டு தள்ளி இருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் சில ரசிகர்கள் இரண்டு குழந்தைகள் பெற்ற பிறகும் இப்படி மேலே அழகில் ஜொலிக்கிறாரே என்ற கேள்வியையும் முன் வைத்திருக்கிறார்கள்.
எப்போதும் தான் சிரித்தபடி இருப்பது போல் ரசிகர்களும் இன்புற்று இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இவர் வெளியிடுகின்ற புகைப்படங்கள் ஒவ்வொன்றும் இருப்பதால் இவருக்கு மேலும் பட வாய்ப்புகள் மட்டுமல்லாமல் என்ன தெரியணும் வாய்ப்புகள் வந்து சேரும் என்று ரசிகர்கள் கூறி இருக்கிறார்கள்.
சினிமாவிலும் இழுத்துப் போர்த்தி கொண்டு அதிகளவு கவர்ச்சி காட்டாத சினேகா எப்போதும் இப்படி இருந்தால் மிகவும் நல்லது என்று ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள்.