சிநேகா, (Sneha) தமிழ் சினிமாவில், ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகை.சிநேகா, தமிழில் மட்டுமின்றி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பிறமொழி படங்களிலும் அதிகமாக நடித்திருக்கிறார். தெலுங்கில் வந்தே மாதரம் என்பது இவரது முதல் படம். இப்போது, விடியல் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். தமிழில், சிநேகா எப்போது நடிக்க வந்தாலும், அவருக்கு என சிறப்பான வரவேற்பு, ரசிகர்களிடம் இருக்கிறது.
Snehaபட்டாஸ், வேலைக்காரன், ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை, உன் சமையலறையில், அங்காடித் தெரு, தீராத விளையாட்டு பிள்ளை, கோவா, அச்சமுண்டு, அச்சமுண்டு, பிரிவோம் சந்திப்போம், இன்பா, பாண்டி, ஹரிதாஸ், முரட்டுக்காளை, பொன்னர் சங்கர், பவானி, வந்தே மாதரம், ஆயுதம், போஸ்,, சின்னா, ஜனா, வசூல் ராஜா எம்பிபிஎஸ், ஏப்ரல் மாதத்தில், ஆட்டோகிராப், வசீகரா, பார்த்திபன் கனவு,, சிலம்பாட்டம், நான் அவன் இல்லை, பள்ளிக்கூடம். புதுப்பேட்டை,கிங், பம்மல் கே சம்பந்தம், உன்னை நினைத்துல ஆனந்தம், விரும்புகிறேன், எனன்னவளே என,சிநேகா நடித்த படங்கள் எல்லாமே, மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற, சிறந்த படங்களாகவே இருக்கினறன. இவற்றில் பெரும்பாலான படங்கள், அதிக நாட்கள் ஒடியவை. சிநேகாவுக்கு நல்ல நடிப்பு வாய்ப்பை தந்த படங்களாகவும் இவை இருந்தன.
குறிப்பாக பள்ளிக்கூடம், ஆட்டோகிராப், சின்னா, வசூல்ராஜா எம்பிபிஎஸ், புதுப்பேட்டை, பார்த்திபன் கனவு, உன் சமைலறையில் என பல படங்களை சொல்லலாம். அந்த கேரக்டரில் தன்னை முழுமையாக உள்வாங்கி, அவர் நடித்ததால்தான், அவரால் நல்ல கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் ஆக பெயர் வாங்க முடிந்தது.துவக்கத்தில் சில படங்களில் ஸ்ரீகாந்துடன் சிநேகா ஜோடியாக நடித்தனர். குறிப்பாக போஸ், பார்த்திபன் கனவு படங்களில் மிகவும் நெருக்கமான காட்சிகளில் அவர்கள் நடித்ததால், இருவருக்கும் காதல் என பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால், கடைசியில் அது வதந்தியாக போய்விட்டது.
Snehaஅச்சமில்லை அச்சமில்லை என்ற படத்தில் பிரசன்னா– சிநேகா கணவன், மனைவியாக நடித்தனர். அப்போது, இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இதையடுத்து, இரு வீட்டார் சம்மதத்துடன், இவர்களது திருமணம் விமரிசையாக நடைபெற்றது.நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்த பிறகு, சிநேகா இரண்டு குழந்தைகளுக்கு தாயானார். பின், சினிமா வாய்ப்புகளை சிநேகா குறைத்துக் கொண்டார். முக்கிய கேரக்டர்களில் மட்டுமே நடிக்கிறார்.பிரபல டிவி நிகழ்ச்சிகளில், நடுவராக மட்டுமே பங்கேற்கிறார்.
Snehaகுடும்பப் பாங்கான அழகியாக, சிநேகா புடவையில் அம்சமான பெண்ணாக காட்சியளிக்கிறார். அதனால், அடிக்கடி புடவையில் இருக்கும் படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்வது வழக்கம்.ரம்ஜான் பண்டிகையை இஸ்லாமிய மக்கள் கொண்டாடி வரும் நிலையில் தனது கணவர் பிரசன்னாவுடன் துபாய் மற்றும் பாலைவன பகுதியில் ஒட்டகங்கள் பின்னணியில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை, சிநேகா அப்டேட் செய்திருக்கிறார்,
Snehaஅதில், ஈக் முபாரக் என, ரம்ஜான் வாழ்த்துகளை சிநேகா டேக் செய்திருக்கிறார். இந்த புகைப்படங்கள் இப்போது வைரலாகி வருகின்றன. ஆனால், எந்த புகைப்படமாக இருந்தாலும் சிநேகாவின் அழகு ரசிகர்களை பெருமூச்சவிட்டு ஏங்க வைக்கிறது. இந்த புகைப்படங்களும் அதே ரகம்தான்.
மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு, தொடர்ந்து தமிழகம் இணையத்தை படியுங்கள்.