நடிகை சினேகா சமீப காலமாக இன்ஸ்டாகிராமில் தன்னுடைய புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார். இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். மட்டுமில்லாமல் உங்களுக்கு வயது தான் ஆகிறது தவிர உங்களுடைய இளமையும் அழகும் குறையவே இல்லை.
இப்போதும் நீங்கள் ஹீரோயினாக நடிக்கலாம் என்று இவருடைய ரசிகர்கள் தங்களுடைய ஆவலை வெளியிட்டு வருகிறார்கள். தமிழ் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களில் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களால் புன்னகை அரசி என்று அழைக்கப்பட்டவர் நடிகை சினேகா.
ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் குறைவதை அறிந்து கொண்ட நடிகை சினேகா கவர்ச்சியாக நடிக்கவும் ஆயத்தமானார். அந்த வகையில், நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான பாண்டி என்ற படத்தில் படு கிளாமரான காட்சிகளில் நடித்து ரசிகர்களை அதிர வைத்தார்.
தொடர்ந்து அவர் நடித்த படங்களில் குடும்பப்பாங்கான நடித்தாலும் கூட பாடல் காட்சிகளில் கவர்ச்சிக்கு தாராளம் காட்டினார். இதனால் அவருக்கு படவாய்ப்புகள் குவிந்தது. மறுபக்கம் விளம்பரப் படங்களிலும் நடித்து வந்தார்.
அப்படி விளம்பரப் படங்களில் நடிக்கும்போது பிரபல துணிக்கடை அதிபர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக வாய் வழியிலேயே தமிழ்நாடு முழுக்க ஒரு வதந்தி பரவியது. இந்த வதந்தியை கிட்டத்தட்ட உண்மை என்பது போலவே நடிகை சினேகாவை சுற்றி நடக்கும் விஷயங்கள் தென்பட்டன.
அவர் குறித்து வெளியிடும் அவர் குறித்து வெளியாகும் தகவல்களும் அதனை உறுதிப்படுத்தும் விதமாக இருந்தன என்பது தனிக்கதை. ஒரு கட்டத்தில் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நடிகை சினேகா அதன் பிறகுதான் துணிக்கடை அதிபருடன் விவகாரம் முடிவுக்கு வந்தது.
நடிகை சினேகா தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார் அதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கும் இவர் தன்னுடைய உடல் எடையை கணிசமாக குறைத்து மீண்டும் பழைய லுக்கிற்கு மாறியிருக்கிறார்.
அவ்வப்போது தன்னுடைய இணையப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்து வரும் நடிகை சினேகா சமீபத்தில் முறைகளில் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்தது.
இந்நிலையில் ஆரஞ்சு நிறத்திலான ஒரு உடையில் சோபாவில் குத்த வைத்திருக்கும் இவரது புகைப்படங்கள் சில இணையத்தை கலக்கி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை எழுதி வருகின்றனர்.