” சிக்கலே என் வாழ்க்கையாகி விட்டது..!” – ப்ராப்ளம் மேல ப்ராப்ளம் வந்தா எலுமிச்சை பழ தீபம் தீர்வு தரும் ..!

பிறந்தநாள் முதல் இன்று வரை சிக்கலில் எனக்கு வாழ்க்கை ஆகிவிட்டது என்று புலம்பக் கூடிய அனைவரும் அந்த சிக்கலில் இருந்து எப்படி தப்பிப்பது. எதனால் இந்த சிக்கல்கள் ஏற்படுகிறது என்பதை பற்றி எல்லாம் எண்ணி மேலும் துன்பத்துக்கு ஆளாகாமல் உங்கள் வீட்டில் இருக்கும் எலுமிச்சம் பழத்தைக் கொண்டு தினமும் தீபம் போடுவதால் எந்த பிராபலத்தையும் நீங்கள் ஈசியாக சால்வ் பண்ணி விடலாம்.

 அப்படிப்பட்ட அற்புதமான சக்தி இந்த எலுமிச்சம் பழம் தீபத்திற்கு உள்ளது என்றால் உங்களால் நம்ப முடியாது. நீங்கள் அந்த உண்மையை உணர வேண்டும் என்றால் உடனடியாக உங்கள் வீட்டில் அது எந்த கிழமையாக இருந்தாலும் சரி, இரண்டு எலுமிச்சை பழ தீபங்களை ஏற்றி பாருங்கள் உங்களுக்கே புரியும் நாங்கள் சொன்னது உண்மை என்று.

 அதுவும் இந்த தீபத்தை நீங்கள் மாலை நேரத்தில் 4:30 மணியில் இருந்து ஆறு மணிக்குள் ஏற்றி விட வேண்டும். குறிப்பாக இந்த தீபத்தை ஏற்றும் போது நல்லெண்ணெய் தீபமாக ஏற்றுவதை விட நெய் விட்டு ஏற்றுவது சிறப்பை கொடுக்கும்.

 இந்த தீபத்தை ஏற்றுவதால் உங்கள் மனதில் இருக்கும் எதிர்மறை ஆற்றல்கள் குறைந்து நேர்மறை ஆற்றல்கள் மேலோங்கி வளரும். இதன் மூலமே நீங்கள் சிக்கல்களில் இருந்து வெளிவருவதற்கான உபாயத்தை நீங்களே உருவாக்கக் கூடிய ஆற்றல் உங்களுக்குள் ஏற்படும்.

இதனை தொடர்ந்து ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் நீங்கள் இதை செய்வதின் மூலம் உங்களுக்குள் ஏற்படுகின்ற மாற்றத்தை நீங்களே உணர்ந்து கொள்ளலாம். எனவே நீங்கள் உங்கள் சிக்கலை பற்றி கவலைப்படாமல்  எலுமிச்சை தீபத்தை ஏற்றி வாருங்கள்.

மேலும் நீங்கள் உங்கள் கையால் ஏற்றி இறைவனை முழு மனதோடு தியானம் செய்வதன் மூலம் சிக்கல்களை தவிர்த்து விடலாம். உங்கள் மனதில் இருக்கும் குறைகளை கூறி உங்களுக்கு பிடித்தமான தெய்வத்தை வேண்டிக் கொள்ளலாம். இதன் மூலம் கட்டாயம் உங்கள் சிக்கல் விலகி நல்ல நிலை ஏற்படும்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …