“திங்கட்கிழமை ஏற்படும் சோமவார பிரதோஷம்..!” – சிறப்புக்கள் என்னென்ன பாக்கலாமா?

சிவனுக்கு உரிய பிரதோஷ காலத்தில் நந்தி பகவானுக்கும் சிவபெருமானுக்கும் எண்ணற்ற அபிஷேக ஆராதனைகளை நடத்தி மக்கள் தங்கள் குறைகளை கூறி தெய்வத்திடம் வேண்டுதல்களை வைப்பார்கள். அது மட்டுமல்லாமல் இந்த தினத்தில் நந்தி பகவான் காதில் நடக்க வேண்டியதை கூறி அதை நடத்தித் தருமாறு பக்தர்கள் கோரிக்கை வைப்பது வழக்கம்.

அதிலும் சனி பிரதோஷம் மற்றும் திங்கட்கிழமை வரக்கூடிய பிரதோஷத்திற்கு சிறப்பான பலன்கள் உள்ளதாக கூறியிருக்கிறார்கள்.

எனவே இந்தக் கட்டுரையில் திங்கட்கிழமை அதாவது சோமவார பிரதோஷத்தில் நாம் பூஜையில் கலந்து கொள்வதோடு அந்த சோமவாரத பிரதோஷத்திற்கு உள்ள சிறப்புகள் என்ன என்பது பற்றி இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

சோமவார பிரதோஷத்தின் சிறப்புகள்

சந்திர தோஷத்தால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் சோமவார பிரதோஷத்தன்று சிவனை தரிசித்து வழிபடுவதன் மூலம் சந்திர தோஷம் உங்களுக்கு நீங்கும்.

மேலும் ஆயிரம் பிரதோஷங்களுக்கு சென்ற பலனை ஒரே ஒரு சோமவார பிரதோஷம் உங்களுக்கு தந்துவிடும். அன்றைய நாள் முழுக்க முழுக்க நீராகாரத்தை உட்கொண்டு வேறு எதையும் உண்ணாமல் நீங்கள் விரதம் இருக்கும்போது இந்த பலன் உங்களை வந்து அடையும்.

சோமவார தினத்தன்று கைப்பிடி அளவு காப்பசி வன்னி இலை ஒரு பிடி அருகம்புல் ஆகியவற்றை நந்தியின் கொம்புகளுக்கு இடையே வைத்து நீங்கள் விளக்கேற்றி வழிபடுவதின் மூலம் சனி பகவானால் ஏற்படக்கூடிய தொல்லைகள் அனைத்தும் நிவர்த்தியாகும்.

கொண்டைக்கடலை, எலுமிச்சை சாதம், தயிர் சாதம், சர்க்கரை பொங்கல், வெண்பொங்கல் ஆகியவற்றை கொண்டு தெய்வத்திற்கு நெய்வேத்தியம் செய்வதின் மூலம் உங்களுக்கு உங்கள் முன்னேற்றத்திற்கு எந்தவித தடைகள் வந்தாலும் அந்த தடைகளை தகர்த்து எறிந்து முன்னேற்ற பாதையில் உங்களை அழைத்துச் செல்லும்.

பிரதோஷ காலமான நாலரை மணி முதல் ஆறரை மணிக்குள் நீங்கள் நந்திக்கும், சிவபெருமானுக்கும் சிறப்பு பூஜைகள் செய்து வில்வத்தால் அர்ச்சனை செய்வதின் மூலம் உங்களுக்கு எண்ணற்ற பயன்கள் ஏற்படும்.

எனவே நீங்கள் அனைவரும் திங்கட்கிழமை ஏற்படுகின்ற பிரதோஷத்தை கண்டிப்பாக கடைப்பிடித்துப் பாருங்கள். நிச்சயமாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படுவதோடு குடும்பத்தில் ஒற்றுமை செல்வ செழிப்பு அனைத்தும் மேலோங்கும்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …