“சின்ன வயசுல அந்த பழக்கம் இருந்துச்சு…” – கூச்சமே இல்லாமல் ஒப்பனாக கூறிய நடிகை சோனா..!

தமிழ் திரையுடத்தில் பூவெல்லாம் உன் வாசம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான கவர்ச்சி கன்னி நடிகை சோனா ஐம்பதற்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

மேலும் இவர் குசேலன் படத்தில் வடிவேலுக்கு மனைவியாக பக்காவாக நடித்து ரசிகர்களின் மத்தியில் பிரபலமானார். இதனை அடுத்து சில ரசிகர்கள் ஏன் இப்போது நீங்கள் திரைப்படத்தில் நடிப்பதில்லை என்ற கேள்வியை எழுப்பிய நிலையில் அதற்கு இவர் தக்க பதிலை தந்திருக்கிறார்.

அதில் இவர் தான் சினிமாவை விட்டு போகவில்லை என்றும் இந்த வருடம் நான்கு படங்களில் நடித்திருப்பதாகவும் 12 படங்களை நிராகரித்து உள்ளதாகவும் கூறி இருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் தான் முன்பை போல வெகுளித்தனமாக இல்லாமல் இப்போது முதிர்ச்சியான மனநிலையில் இருப்பதாக கூறி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் தான் ஒரு நல்ல நிலையை எட்ட வேண்டும் என்பதற்காக குடிக்கும் பழக்கத்தை நிறுத்திவிட்டதாக ஓப்பன் டாக் தந்திருப்பதை பார்த்து ரசிகர்கள் அனைவரும் ஆச்சரியம் அடைந்திருக்கிறார்கள்.

மேலும் பணத்துக்காக திரையில் நடிப்பதை விட்டுவிட்டு நல்ல திரைக்கதை அம்சம் உள்ள படங்களை தேர்வு செய்வதாக தற்போது ஓபன் ஆக கூறி இருக்கிறார் .ஏற்கனவே குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி சீரழிந்த நடிகைகள் ஏராளமாக இருக்கும் இந்த காலகட்டத்தில் இவரும் மதுவுக்கு அடிமையாகி இருந்ததையும் தற்போது அதிலிருந்து மீண்டு வந்திருப்பதையும் கேட்டு ரசிகர்கள் ஆறுதல் அடைந்திருக்கிறார்கள்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் பட்டையை கிளப்பி வந்த இவர் சோனா யூனிக் என்ற பேஷன் கடையை நடத்தி வருகிறார். திரைப்படங்களில் மட்டுமல்லாமல் சின்ன திரையையும் கலக்குவதற்காக களம் இறங்க இவர் முடிவு செய்திருக்கிறார்.
அன்மையில் ஒளிபரப்பப்பட்ட அபி டெய்லர் என்ற சீரியலில் இவர் நடித்துள்ளாராம்.

அதுமட்டுமல்லாமல் தன்னுடைய சுயசரிதியை சினிமாவாகவோ வெப் சீரியஸ் ஆகவோ தயாரித்து இயக்க சேனா தற்போது முடிவு செய்து இருக்கிறார் .மேலும் அந்தத் தொடரை இவரே டைரக்ட் செய்பவர் என்பது தெரியவந்துள்ளது.

குடி குடியை கெடுக்கும் என்பது பழமொழி ஒரு வீட்டில் ஒரு ஆண் குடித்தால் அந்த ஆண் மட்டும் தான் அழிவான். ஆனால் பெண் குடித்தால் குடும்பமே அழியும் என்பதை உணர்ந்தாவது யாரும் இந்த குடிக்கு அடிமையாகாமல் இருந்தால் நல்லது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …