பிரபல திரையுலக தம்பதிகளான ரோஜா மற்றும் ஆர்கே செல்வமணி பற்றி அனைவருக்கும் நன்றாக தெரியும். கேப்டன் பிரபாகரன் படத்தில் விஜயகாந்த் நடிக்க வைத்து மிகப்பெரிய ஹிட் கொடுத்த இயக்குனர் ஆர் கே செல்வமணி. இவர் படங்களில் தனி தன்மை தனித்துவமாக தெரியும்.
தமிழ் திரை உலகில் கனவுக் கன்னியாக திகழ்ந்தவர் ரோஜாவுக்கும் திருமணம் நடந்து இருவருக்கும் இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். போது ரோஜா அரசியலில் ஈடுபட்டு எம்எல்ஏ என்ற அந்தஸ்தில் உயர்ந்து இருக்கிறார்.
இதையடுத்து இவரது மகள் அன்ஷு மாலிகா பிரிவில் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகப்படுத்த உள்ளார் என்ற செய்தி வேகமாகப் பரவி அனைவரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியது.
மேலும் அவர் தற்போது நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் தான் அறிமுகமாக உள்ளார் என்ற வதந்திகள் மிக வேகமாக பரவி வந்த நிலையில் அதற்கான பதிலை ஆர்கே செல்வமணி அளித்துள்ளார்.
இதனை அடுத்து இயக்குனர் ஆர் கே செல்வமணி பேசுகையில் எனது பெண் சிறுவயதிலிருந்தே மிகச் சிறப்பாக படிக்கக்கூடிய பெண் சுமார் 500 விருதுகள் மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சான்றிதழ்களை வாங்கியிருக்கிறார்.
தற்போது அவர் பிளஸ் டூ முடித்துவிட்டு மேற்படிப்புக்காக வெளிநாடு சென்றிருக்கிறார். கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்க வேண்டும் என்று விருப்பப்பட்ட அதன் பின் தற்போது அதே துறையை பாஸ்டன் பல்கலைக் கழகத்தில் படித்து வருவதற்காக அமெரிக்கா சென்று இருக்கிறாள்.
இந்த படிப்பை முடிப்பதற்கு ஏறக்குறைய நான்கு ஆண்டுகள் ஆகும் அப்படி இருக்கக் கூடிய பட்சத்தில் ஏன் பெண் எப்படி இங்கு நடிகர் விக்ரமின் மகனோடு இணைந்து நடிக்க முடியும் என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறார்.
மேலும் நான்கு வருடம் கழித்துதான் அமெரிக்காவிலிருந்து தன் இந்தியா வருவார் என்றும் அவர் வந்தபின் ஹீரோவுக்கு ஹீரோயினியாக நடிப்பாரா இல்லை வேறு ஏதேனும் தொழில் செய்வாரா என்பது அவர் எடுக்கும் முடிவு தான் அதில் எங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை என்று கனகச்சிதமாக பேசியிருக்கிறார்.