சமந்தாவின் ‘மாஜி’ கணவருடன் கள்ள தொடர்பு..? – பிரஸ்மீட்டில் போட்டு உடைத்த சோபிதா துலிபாலா..!

பொன்னியின் செல்வன் படத்தில் நடித்திருப்பவர் சோபிதா துலிபாலா (Sobhita Dhulipala) குந்தவை கேரக்டரில் நடத்த திரிஷாவின் தோழியாக, வானதி கேரக்டரில் நடித்திருந்தார் வானதி.

இவர், இந்த படத்தில் அருள்மொழி வர்மன் கேரக்டரில் நடித்த ஜெயம் ரவிக்கு ஜோடியாக இருந்தவர். இவர் மிஸ் இந்தியா அழகி பட்டம் பெற்றவர். கிளாசிக் டான்சர் என்பதும் கூடுதல் தகவல்.

பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களிலும், இவருக்கு நல்ல முக்கியத்துவம் தரப்பட்டு இருந்தது. அதனால், ஒரு படத்தில் நடித்தாலும், தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை பெற்றுவிட்டார் என்பதில் சந்தேகமே இல்லை.

Sobhita Dhulipala

நடிகை சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யா. காதலித்து திருமணம் செய்துகொண்ட இருவரும், ஒரு கட்டத்தில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். நாக சைதன்யாவும், சமந்தாவும் பிரிந்து ஓராண்டு ஆன நிலையில், சட்டப்படி விவாகரத்து பெற்று ஓராண்டு ஆகிறது.

இந்நிலையில், பல நடிகைகளுடன் ஜாலியாக டேட்டிங் போய் கொண்டிருக்கும் நாக சைதன்யா, சமீபமாக சோபிதா துலிபாலாவுடன் டேட்டிங் செல்வதாக தகவல் பரவி வருகிறது. சில இடங்களில் இருவரும் ஒன்றாக காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

நாக சைதன்யாவும், சோபிதா துலிபாலாவும் ஜோடியாக காணப்படும் புகைப்படங்களும், அவ்வப்போது சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

Sobhita Dhulipala

இந்நிலையில், ஐதராபாத்தில் நடந்த தனியார் நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றக சோபிதா துலிபாலா, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நிருபர்களின் கேள்விக்கு பதிலளித்த சோபிதா துலிபாலா, ஒரு கட்டத்தில் மிக சூடாகி விட்டார்.

அவர் கொதிப்படைய காரணம், நீங்கள் டேட்டிங் செல்கிறீர்களா? என்ற கேள்விக்குதான். செய்தியாளர்களிடம் இருந்து வந்த இந்த கேள்வியால் கோபமடைந்த சோபிதா துலிபாலா, அதற்கு சற்று கோபமாகவே பதிலை வெளிப்படுத்தி இருக்கிறார்.

Sobhita Dhulipala

நான் கிளாசிக்கல் டான்சர். எனக்கு நடனமாடுவது மிகவும் பிடித்திருக்கிறது. சினிமாவில் நடிப்பதிலும் அதிக ஆர்வமாக இருக்கிறேன். ஒரு விதத்தில் நான் நல்ல அதிர்ஷ்டசாலியாக இருப்பதால், நல்ல நல்ல படங்களில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கிறது.

என் நடிப்பில் நான் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறேன். இப்போதைக்கு, எனக்கு நடிப்பு மட்டுமே மிக முக்கியம்.

அறிவு இல்லாமல், பேசுபவர்களுக்கு பதில் சொல்வது என் வேலை இல்லை. நான் எந்த தவறும் செய்யாத போது, இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றே நினைக்கிறேன்.

Sobhita Dhulipala

அதனால், ஒவ்வொரு விஷயத்துக்கும், விளக்கம் தரவேண்டியது இல்லை. அரைகுறை அறிவுடன் யார் என்ன சொன்னாலும், எழுதினாலும், அல்லது பேசினாலும், அதைப்பற்றி நான் கவலைப்படுவது இல்லை, அதற்கு பதில் கூறியும், விளக்கம் தந்தும் என் நேரத்தை வீணாக்குவதில் எனக்கு விருப்பம் இல்லை, அவரவர் சொந்த வாழ்க்கையை பாருங்கள்.

நிம்மதியாக, அமைதியாக வாழ முயற்சி செய்யுங்கள். உங்கள் வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ள என்ன செய்ய வேண்டுமோ, அதை செய்வதில் உறுதியாக இருங்கள், என செய்தியாளர்களுக்கு சோபிதா துலிபாலா பதில் அளித்துள்ளார்.

Sobhita Dhulipala

அதாவது, நாக சைதன்யாவுடன் டேட்டிங் செல்கிறீர்களா என்ற கேள்விக்குத்தான் அம்மணி, இப்படி சூடான பதிலைத் தந்துள்ளார்.இது தற்போது, சோஷியல் மீடியாவில் டிரெண்ட் ஆகி, வேகமாக பரவி வருகிறது.அதாவது, சினிமாத்துறையில் இருப்பவர்கள் டேட்டிங் செல்வது தப்பில்லாத விஷயம். அதைப்பற்றி நீங்கள் தெரிந்துக்கொள்ள தேவையில்லை.

அறிவு இல்லாமல், நீங்கள் அதை பற்றி கேட்டாலும், பதில் சொல்லும் அவசியம் எனக்கு இல்லை என்பதையே, சோபிதா துலிபாலா இப்படி சொல்லி இருப்பதாக, சோஷியல் மீடியாக்களில், ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு, தொடர்ந்து தமிழகம் இணையத்தை படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …