மடாதிபதிகள் என்றாலே அவர்கள், மன்னர்களைப் போன்ற ஒரு ராஜபோக வாழ்க்கை தான் வாழ்வார்கள். ஆனால் அவர்கள் துறவிகளாக வெளியே தங்களை காட்டிக் கொள்வார்கள். இறைவழி தோன்றல்களை போல தத்துவம் பேசுவார்கள்.
ஆனால், அவர்களது சுகபோக வாழ்க்கை எல்லாம் சாதாரண மனிதர்களால் நினைத்துக் கூட பார்க்க முடியாது. அந்த அளவுக்கு அவர்கள் தலையில் வைத்து கொண்டாடப்படும் மனிதர்களாக, தெய்வ அம்சங்களை கொண்ட தெய்வப்பிறவிகளாக மதிக்கப்படுவர்.
அவர்களை அப்படி கொண்டாடி மடாதிபதிகளை, உல்லாசமாக வாழ வைப்பது காலம் காலமாக நடந்து வருகிறது.
விஜயேந்திரர்
காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரர், அவருக்கு பிறகு இளைய மடாதிபதியாக உள்ள விஜயேந்திரர் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக் கொள்பவராக இருந்து வருகிறார்.
கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி காஞ்சி இளைய சங்கராச்சாரியார் பற்றி சில நாளிதழ்களில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.
பல பெண்களுடன் தொடர்பு
சென்னை அசோக் நகரைச் சேர்ந்த அனுராதா, கும்பகோணத்தைச் சேர்ந்த வனஜா, ஆந்திராவில் சேர்ந்த ஜெயா போன்ற சில பெண்கள் அடிக்கடி தனிமையில் இளைய மடாதிபதி ஜெயேந்திரரை சந்தித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்து, மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
இது காவல்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையிலும் உறுதியாக உண்மைதான் என்றும் தெரியவந்தது.
காஞ்சி சங்கராச்சாரியார் மடத்துடன், ஜெயேந்திரர் மகன் இளைய மடாதிபதி விஜயேந்திரருடன் அந்த பெண்கள் தொடர்பில் இருந்ததும், அவர் நெருங்கிய தொடர்பு பெண்களுடன் வைத்திருந்ததும் விசாரணையில் வெளிவந்தது.
நடிகை சொர்ணமால்யா
அது மட்டுமின்றி சினிமா நடிகைகள் சிலரும், காஞ்சி மடத்துடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. அதில் மிகவும் குறிப்பிடத்தக்க ஒருவராக நடிகை சொர்ணமால்யா இருந்துள்ளார்.
ஜோதிகா தோழி
இவர் சன் டிவியில் இளமை புதுமை என்ற நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர். சிறந்த பரதநாட்டிய கலைஞர். இவர் மொழி படத்தில் ஜோதிகாவின் தோழியாக நடித்திருப்பார். சில டிவி சீரியல்களிலும் சொர்ணமால்யா நடித்திருக்கிறார்.
கணவருடன் விவாகரத்து
சொர்ணமால்யா திருமணமான சில ஆண்டுகளில், தனது கணவரை பிரிந்து அவரிடம் இருந்து நிரந்தரமாக விலக விவாகரத்து கேட்டார். அப்போது அவரது விவாகரத்து குறித்த பஞ்சாயத்து காஞ்சி மடத்தில் நடந்துள்ளது. அப்போது சொர்ணமால்யாவுக்கு, ஜெயேந்திரர்தான் விவாகரத்து விஷயத்தில் ஆலோசனை வழங்கினார் என்றும் கூறப்படுகிறது.
வீடு வாங்கி தந்த சங்கரமடம்
அது மட்டும் இன்றி அடிக்கடி சங்கராச்சியர் மடத்துக்கு சொர்ணமால்யா வந்து செல்வதும், அதேபோல் சங்கர மடத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள், சிலரும் சென்னையில் உள்ள சொர்ணமால்யா வீட்டுக்கு அடிக்கடி செல்வதும் உறுதியானது. இதற்காக சங்கரமடம் மூலம் சொர்ணமால்யாவுக்கு சென்னையில் ஒரு வீடும் வாங்கி தரப்பட்டுள்ளது.
வெளிச்சத்துக்கு வந்தது
இதன் மூலம் இளைய மடாதிபதி விஜயேந்திரருடன் சொர்ணமால்யா நெருக்கமான தொடர்பில், உறவில் இருந்திருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதுகுறித்து சொர்ணமால்யாவின் கணவரே போலீசாரிடம் விசாரணையில் கூறியிருக்கிறார்.
திருமண வாழ்க்கையை இழந்தார்
காஞ்சி மட விஜயேந்திரருடன் தொடர்பு இருந்தது அம்பலமானதால்தான் திருமண வாழ்கையை இழந்திருக்கிறார் நடிகை சொர்ணமால்யா.