நடிகை சவுந்தர்யா இறந்து 20 ஆண்டுகள்.. 100 கோடி சொத்து உயில் என்ன ஆனது..? பரபரப்பு தகவல்…!

தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்திருந்தாலும், தமிழ் சினிமா ரசிகர் மத்தியில் சில நடிகைகள் எப்போதுமே நினைவில் இருப்பார்கள். அந்த வகையில் சொற்பமான படங்களில் நடித்தாலும், ரசிகர்களால் இன்னும் நினைவு கூரப்படும் ஒரு முக்கிய நடிகையாக இருப்பவர் நடிகை சவுந்தர்யா. ஆனால் அவர் இந்த மண்ணை விட்டு, மறைந்து 20 ஆண்டுகளாகிறது.

சவுந்தர்யா

நடிகை சவுந்தர்யா, டைரக்டர் ஆர் வி உதயகுமார் இயக்கத்தில், பொன்னுமணி என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படத்திலேயே நவரச நாயகன் கார்த்திக் உடன் ஜோடியாக நடித்து, ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

ரஜினிக்கு ஜோடி

தொடர்ந்து ரஜினிகாந்த் உடன் அருணாச்சலம், படையப்பா ஆகிய 2 படங்களிலும், விஜயகாந்துடன் சொக்கத்தங்கம், தவசி ஆகிய 2 படங்களிலும் சௌந்தர்யா நடித்து, முன்னணி நடிகையாக இருந்தார். தெலுங்கில் நிறைய படங்களில் சவுந்தர்யா நடித்தார்.

கடந்த 1992ம் ஆண்டு முதல் 2003ம் ஆண்டு வரை நிறைய படங்களில் நடித்த அவர், ஒரு கட்டத்தில் தனது உறவினர் ஒருவரையே திருமணம் செய்து கொண்டார்.

பாஜகவில் இணைந்தார்

திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிப்பதை குறைத்துக் கொண்ட சவுந்தர்யா, கடந்த 2004 ஆம் ஆண்டில் அரசியலில் ஆர்வம் காட்டினார். அப்போது, பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த அவர், தேர்தல் பிரசாரங்களிலும் ஈடுபட்டார்.

இதையும் படியுங்கள்: “இதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க..” நீதிமன்றம் ஐஸ்வர்யாவிடம் எழுப்பிய நறுக் கேள்வி..!

விமான விபத்து

அப்போது தனது சகோதரர் அமர்நாத் உடன், ஹெலிகாப்டரில் பிரசாரத்துக்காக கர்நாடகாவில் இருந்து சென்ற போது, திடீரென மலை உச்சியில் விமானம் விபத்தில் சிக்கி வெடித்து சிதறியது. இதில் சவுந்தர்யா உடல் கருகி உயிரிழந்தார்.

20 ஆண்டுகள் ஆனது

சவுந்தர்யா இறந்து இருபது ஆண்டுகள் ஆன நிலையில், இன்றும் சௌந்தர்யாவை நினைத்து வருத்தப்பட்டு, கண்ணீர் சிந்தும் ரசிகர்கள் இருக்கவே செய்கின்றனர் .

100 கோடி சொத்துகள்

சவுந்தர்யா, நிறைய படங்களில் நடித்த காலகட்டத்தில் கோடிக்கணக்கில் வருமானம் சம்பாதித்தார். அந்த வகையில் சவுந்தர்யாவின் 100 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் வீடுகள், கடைகள், விவசாய நிலங்கள், ரொக்கம், தங்கம், வைர நகைகள் என ஏகப்பட்ட சொத்துகள் இருந்துள்ளன.

இதையும் படியுங்கள்: அதை பெருசு பண்ண ஊசி போட்டுகிட்டேன்.. கூச்சமின்றி கூறிய பிரபல நடிகை…!

போலி உயில்

இந்த சொத்துகள் குறித்து, சவுந்தர்யா உயில் எழுதி வைத்திருப்பதாக கூறப்பட்டது. ஆனால் அப்படி எந்த உயிலும் இல்லை. அது போலியான உயில் என்று கூறி, சவுந்தர்யாவின் தாய் மற்றும் அவரது தாய் இருவரும் அந்த 100 கோடி ரூபாய் சொத்துக்களை தங்களுக்குள் பிரித்துக் கொண்டுள்ளனர்.

நடிகை சவுந்தர்யா இறந்து 20 ஆண்டுகளான நிலையில், 100 கோடி சொத்து உயிலை அவரது அம்மாவும், கணவருமே பிரித்துக் கொண்ட பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …