திரையுலகில் நடிகையாக 72 ஆண்டுகள் போராடி வென்ற சௌகார் ஜானகி பற்றிய முக்கிய செய்திகள்…!!

நவரசங்களையும் தனது நடிப்பின் மூலம் வெளியிட்டு ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்த பழமையான நடிகை தான் சௌகார் ஜானகி. இவருக்கு வயது 92 தொட்டு விட்ட நிலையில் பிறந்த நாளை கொண்டாடி இருக்கிறார். சுமார் 72 ஆண்டுகளாக கலைப் பணியை ஆற்றி வரும் தென்னிந்திய நட்சத்திரம் இவர்.

 ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் 1931 ஆம் ஆண்டு டிசம்பர் 12 பிறந்த இவர் ஆரம்பக் கல்வியை சென்னையில் உள்ள சாரதா வித்யாலயா பள்ளியில் படித்திருக்கிறார்.

படிக்கும்போதே வானொலியில் வானொலி கலைஞராக பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கக் கூடிய இவர் பி என் ரெட்டி தனது குணசுந்தரி கதா என்ற படத்திற்காக அணுக குடும்பத்தார்  நடிக்க வைக்க மறுத்து விட்டனர்.

 இதனை அடுத்து இவருக்கு 1947-இல் சீனிவாசராவ் என்பவரோடு திருமணம் நடந்தது குடும்பச் சூழல் காரணமாக கையில் குழந்தையுடன் மீண்டும் சினிமா வாய்ப்பை தேடிச் சென்ற இவருக்கு சௌகார் படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது.

 இந்தப் படத்தில் இவர் என் டி இராமராவுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இதுதான் இவரது முதல் படம் அடுத்து வளையாபதி என்ற தமிழ் படத்தில் இவர் அறிமுகமானார். இதனை அடுத்து இவர் தமிழில் படிக்காத மேதை, பாலும் பழமும், பார் மகளே பார், புதிய பறவை, உயர்ந்த மனிதன் என பல படங்களில் சிவாஜியுடன் இணைந்து நடித்தார்.

மேலும் பணம் படைத்தவன், பெற்றால் தான் பிள்ளையார், தாய்க்கு தலை மகன், ஒளி விளக்கு ஆகிய படங்களில் எம்ஜிஆர் உடன் நடித்தார்.

 இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்த படங்கள் என்றால் நீர் குமிழி, பாமா விஜயம், எதிர்நீச்சல், இரு கோடுகள், காவியத்தலைவி, தில்லுமுல்லு ஆகிய படங்களை கூறலாம். இந்த படங்களை கே பாலசந்தர் இயக்கியிருந்தார்.

 அதுமட்டுமல்லாமல் ரஜினி, கமலஹாசன், பிரேம் நசீர் ஆகியோரோடும் இவர் இணைந்து நடித்திருக்கிறார். வானவராயன் வல்லவராயன், சின்ன தம்பி, பிஸ்கோத் போன்ற படங்களில்  தற்போதைய தலைமுறை உடன் இணைந்து தனது கலை பயணத்தை தொடர்ந்தவர்.

 தென்னிந்திய மொழிகளில் சுமார் 300க்கும் மேற்பட்ட மொழிகளில் நடித்திருக்க கூடிய இவர் ஹிந்தியிலும் நடித்திருக்கிறார். தற்போது 92 வயதில் அடி எடுத்து வைத்திருக்கும் இவர் இன்னும் சில படங்களில் நடித்து இன்புற்று வாழ வேண்டும் என்று அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்து வண்ணம் இருக்கிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …