நடிகை திரிஷா திருமணமே செய்து கொள்ளப் போவதில்லை என்ற முடிவுக்கு வந்திருக்கிறார் என்றும் இதற்கு முக்கியமான காரணம் இவருடைய ஜாதக அமைப்புதான் என்றும் விவரம் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
ஜாதக பொருத்தம் பார்க்காமலே தயாரிப்பாளர் வருண்மணியன் என்பவருடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார் நடிகை திரிஷா. அதன் பிறகு ஜாதகம் பொருத்தம் பார்த்த தயாரிப்பாளர் வருண்மணியன் குடும்பத்தார் பதறியடித்துக்கொண்டு இது திருமணத்தை நிறுத்தி விட்டனர் என்றும் விவரமறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
இதனால் திருமணத்தின் மீதே ஒரு வெறுப்பில் இருக்கிறாராம் நடிகை திரிஷா. தற்பொழுது தனக்கு 40 வயது ஆகிவிட்ட காரணத்தினால் சினிமாவில் தொடர்ந்து பயணிக்க முடியாது. அப்படியே படித்தாலும் ஹீரோயினாக பயணிக்க முடியுமா..? என்பது கேள்விக்குறிதான்.
எனவே, நடிகை திரிஷா அரசியலில் இறங்கி தன்னுடைய பங்களிப்பை கொடுக்கலாம் என்ற முடிவில் இருக்கிறாராம். காரணம் நடிகை திரிஷாவின் ஜாதகம்தான். இவருடைய ஜாதகத்தில் சூரியன் உச்சம் அடைந்து இருக்கின்றது.
அரசியலில் முறையான ஆலோசனைகளுடன் நடிகை திரிஷா பயணிப்பார் ஆனால் அரசியலில் இவருக்கு நல்ல வரவேற்பு மற்றும் சிறந்த ஆளுமையாக முன்னேற வாய்ப்புகள் இருக்கிறது என்கிறார்கள்.
இந்நிலையில், இந்தியாவில் கிட்டத்தட்ட அழிவின் விளிம்பிலிருந்து கூடிய ஒரு கட்சியான காங்கிரஸ் கட்சியில் நடிகை திரிஷா இணைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்னும் சிலர் நடிகை திரிஷா பாஜகவில் இணைய தான் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. ஏனென்றால் அடுத்த 1o ஆண்டுகளுக்கு நிச்சயமாக ஆட்சியில் இருக்கப்போகும் கட்சி என்றால் அது பாஜகதான். எனவே ஜெயிக்கப்போகும் குதிரையில் தான் நடிகை திரிஷா பயணிக்க விரும்புவார்.
மட்டுமில்லாமல், பாஜகவின் இருக்கும், நடிகை குஷ்பு, காயத்ரி ரகுராம், விஜயஷாந்தி, கலா மாஸ்டர், நமீதா ஆகியோர் நடிகை திரிஷாவிற்கு மிகவும் வெருங்கியவர்கள் எனவே பாஜகவில் இணையவே திரிஷா விரும்புவார் என்றும் சில அரசியல் நோக்கர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அரசியலில் நுழைவதில் நடிகை திரிஷா உறுதியான நிலைப்பாட்டில் இருப்பதாகவும் சரியான நேரத்தில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறப்படுகிறது. நடிகை திரிஷா என்ன அறிவிப்பை வெளியிடப் போகிறார்..? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.