அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய சின்ன சின்ன ஆன்மீக குறிப்புகள்..!

பிரபஞ்சம் இயங்குகிறது என்றால் அதற்கு மனிதனை விட உயர்ந்த அப்பாற்பட்ட சக்தி ஒன்று உள்ளது என்று அர்த்தம் எல்லோர் மனதிலும் இருக்கிறது. அப்படி இந்த பிரபஞ்சத்தையே கட்டி ஆளுகின்ற அந்த சக்தியை தான் நாம் கடவுள் என்ற பெயரால் குறிப்பிட்டு வருகிறோம்.

அப்படிப்பட்ட கடவுளை வழிபட எண்ணற்ற முறைகள் இருக்கும் பொழுது நாம் சின்ன சின்ன விஷயங்களை கடைப்பிடிப்பதன் மூலம் நாம் வாழ்க்கையில் உயர்ந்த இடத்தை அடைவதோடு எடுத்திருக்கும் எந்த மனிதப் பிறவியை கடந்து தேவ பிறவியை எடுக்க முடியும் என்ற கருத்துக்கள் கூறப்பட்டுள்ளது.

அப்படிப்பட்ட ஆன்மீகத்தில் நீங்கள் முழுமையாக ஈடுபட முடியவில்லை என்றாலும் ஒரு சில விஷயங்களில் கரெக்டாக நாம் நடந்து கொள்ள சின்ன சின்ன குறிப்புக்களை ஃபாலோ செய்தாலே போதும். இந்தப் பிறவியின் பயனை நாம் அடைந்து விடலாம். எனவே இந்த கட்டுரையில் முழுமையான சில ஆன்மீக குறிப்புகளை பார்த்து அதன்படி நடக்க நாம் முயற்சி செய்யலாம்.

💐உங்கள் வீட்டில் துளசி மாடம் இருந்தால் கண்டிப்பாக அந்த துளசி மாடத்தில் விளக்கேற்றி மூன்று முறை வலம் வர வேண்டும் என்பதை அந்த குடும்பத் தலைவி கட்டாயம் செய்து வருவதின் மூலம் வீட்டில் லட்சுமி கடாட்சம் அதிகரிக்கும்.

💐என்றுமே உங்கள் வீட்டில் விளக்கு ஏற்றுவது செல்வ செழிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக செவ்வாய் மற்றும்  வெள்ளிக்கிழமைகளில் ஐந்து முகம் கொண்ட பஞ்சமுக விளக்கை ஏற்றி வழிபடுவதின் மூலம் மேலும் உங்கள் செல்வத்தையும், செல்வாக்கையும் அதிகரிக்க முடியும்.

💐உங்கள் வீட்டுக்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு குங்குமமும், தண்ணீரும் கொடுக்க வேண்டும். நீங்கள் மஞ்சள் கிழங்கை அவர்களுக்கு கொடுப்பதன் மூலம் ஜென்ம ஜென்மங்களாக செய்த பாவங்கள் விலகி பாக்கியமும், பொருளும் சந்தோஷமும் வந்து சேரும்.

💐அன்னம், உப்பு, நெய் போன்றவற்றை வெறும் கைகளால் பரிமாறக்கூடாது. கரண்டியால் மட்டுமே பரிமாற வேண்டும். அன்னம்,உப்பு, நெய் இவை கோ மாமிசத்திற்கு சமம் என்பதை புரிந்து கொள்ளுங்கள். அதுபோல பெண்கள் வளையல் அணியாமல் பரிமாறக்கூடாது.

வீட்டில் தீய வார்த்தைகள் பேச வேண்டாம். குழந்தைகள், பெரியவர்கள், நோயாளிகளிடம் கோபத்தை காட்டாமல் இனிமையான சொற்களை பேசுங்கள். இரக்க குணம் இருந்தால் கண்டிப்பாக தெய்வம் வாசம் செய்யும். அன்பு உள்ளம் கொண்டவர்களிடம் உலகமே மண்டியிடும் என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …