சமூக வலைத்தளங்களில் மிகவும் ட்ரெண்டிங் ஆக இருக்கக் கூடிய விஷயம் நடிகை ஸ்ரீரெட்டி அந்த பலான விஷயம்தான்.
சினிமா தோன்றிய காலம் தொட்டே பெண்கள் கதாநாயகியாக நடிக்க வேண்டுமென்றால் கண்டிப்பாக அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என்ற வார்த்தையை இது உண்மையாகிவிட்டது.
மேலும் ஸ்ரீ ரெட்டிக்கு பட வாய்ப்புக்கள் தருவதாகக் கூறிய பல முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என்று யாரும் இவரை விட்டு விடவில்லையாம். இப்போது இந்த விஷயம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
இவர் கூறிய லிஸ்டில் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ், ராகவா லாரன்ஸ், விஷால், ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் மீது அடுக்கடுக்கான புகார்களை அள்ளி தந்திருக்கிறார்.
சினிமா பிரபலங்கள் இவர் தன்னை பிரபலப்படுத்தி கொள்வதற்காகத்தான் இதுபோன்ற பாலியல் சம்பந்தப்பட்ட புகார்களை இவர் அளித்து வருவதாக கூறிய போதிலும் இதில் ஏதோ உண்மை உள்ளது.
விரைவில் இதனை புரிந்து கொள்ளக் கூடிய வகையில் தான் அவர் சில ஆதாரங்களை வெளியிடப் போவதாக கூறியிருக்கிறார்.
மேலும் அவர் ஆடை இல்லாமல் அரைகுறையாக போராட்டம் நடத்திய போதே தன் வாழ்க்கை முடிந்து விட்டது. தற்போது தன் அம்மா சகோதரன் கூட என்னிடம் பேசுவதில்லை என தன் நிலையை மிகவும் உருக்கமான நிலையில் பதிவு செய்துள்ளார்.
அதிக அளவு மன உளைச்சல் இருக்கக்கூடிய இவர் தற்போது கிட்டத்தட்ட 25 பேரிடம் ஏமாந்து இருப்பதாகவும் அவர்கள் எல்லோரும் திரைத் துறையைச் சார்ந்தவர்கள் தான் என்ற குண்டை போட்டிருக்கிறார்.
மேலும் கதைக்கு தேவை என்றால் உங்கள் விருப்பப்படி ஆடையை நீங்கள் அணிந்து கொள்ளுங்கள். ஆனால் இசை வெளியீட்டு விழா போட்டோ சூட்க்கு எல்லாம் அப்படி செய்ய வேண்டாம் என என்னை அவர்கள் கட்டாயப்படுத்தி அவர்கள் விருப்பத்திற்கு தான் நான் உடை அணியவேண்டும் என்று கூறியது என்று நினைத்தாலும் எனக்கு மிகவும் அவமானமாக இருக்கிறது.
தன்னையே தனக்கு பிடிக்கவில்லை என்பது போன்ற வார்த்தைகளோடு தன் மனக்குமுறலை வெளிப்படுத்தியிருக்கும் விதத்தைப் பார்த்தால் அதில் உண்மை இருக்குமா? என்று எண்ணத் தோன்றுகிறது. இந்தத் தகவல்களை படித்த இணையதள வாசிகள் இதை மிகவும் டிரண்டிங்கான செய்தியாக மாற்றி விட்டார்கள்.