கும்கி ரேஞ்சர் கைது..! – என்ன காரணம்ன்னு தெரிஞ்சா.. காரி துப்பிடுவீங்க..!

நடிகர் விக்ரம் பிரபு, லட்சுமிமேனன் நடிப்பில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான “கும்கி” திரைப்படத்தில் ஃபாரஸ்ட் ரேஞ்சராக நடித்தவர் நடிகர் ஸ்ரீஜித் ரவி ( Sreejith Ravi ).

தற்பொழுது குழந்தைகளிடம் பாலியல் ரீதியாக அத்து மீறியதாக குற்றம் சாட்டப்பட்டு போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 4ஆம் தேதி இரண்டு பெண் குழந்தைகள் முன்பு ஆடை இல்லாமல் ஸ்ரீஜித் ரவி நின்றதாக இவர் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

திருச்சூரில் உள்ள இந்த குழந்தைகள் தங்களுடைய பெற்றோரிடம் ஸ்ரீஜித் ரவி இப்படி நடந்து கொண்ட விதம் குறித்து கூறியுள்ளனர்.

இதனால் மிரண்டு போன குழந்தைகளின் பெற்றோர்கள் நடிகர் ஸ்ரீஜித் ரவி குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

முன்னதாக 2014 ஆம் ஆண்டும் இதே போல ஒரு புகார் இவர் மீது கொடுக்கப்பட்டது.

அப்போது கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட ஸ்ரீஜித் ரவி தற்போது மீண்டும் இரண்டு பெண் குழந்தைகளிடம் அத்துமீறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் ஸ்ரீஜித் ரவி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவருக்கு, சுஜிதா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …