நெல்லையில் இருக்கும் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அருள்பாலித்து வரும் ஆஞ்சநேயர் தான் கெட் வெல் ஆஞ்சநேயர். மருத்துவமனையில் இருக்கக்கூடிய நோயாளிகள் விரைவில் நோய் நீங்கி ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்பதை மையமாகக் கொண்டுதான் இந்த ஆஞ்சநேயருக்கு கெட் வெல் ஆஞ்சநேயர் என்ற பெயரை தந்து இருக்கிறார்கள்.
நெல்லையின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் இந்தக் கோயிலில் ஒரே கர்ப்ப கிரகத்தில் கணபதி மற்றும் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்கள்.
பக்தர்களுக்கு உரிய பலன்களை உடனே வழங்க கூடிய நிலையில் இந்த ஆஞ்சநேயர் இருக்கிறார். எந்த வேண்டுகோளையும் இவர் முன் வைத்து விட்டால் உடனே நிறைவேற்றி தரக்கூடிய அற்புத ஆற்றல் கொண்டவர்.
சனியின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள், ஏழரைச் சனியால் அவதிப்படுபவர்கள், இந்த ஆஞ்சநேயரை வணங்குவதின் மூலம் சனி பகவானால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் அனைத்தும் சுலபமாக நீங்கும்.
மேலும் ஆஞ்சநேயரை வழிபடுவதால் எம பயம் நீங்கும் என்று முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். இந்த ஹாஸ்பிடலில் இருக்கக்கூடிய நோயாளிகள் அனைவருமே இந்த ஆஞ்சநேயரை வணங்கி விரைவில் சுகம் அடைகிறார்கள்.
இங்கு அனுமானுக்கு வடை மாலை சாத்துதல் மிக பெரிய விசேஷமாக கொண்டாடப்படுகிறது. அனுமாரிடம் வேண்டியதை பெற்ற பக்தர்கள் அனைவரும் அவர்களது வேண்டுதல்களை விரைவாக இவரிடம் செலுத்தி விடுகிறார்கள்.
மேலும் பக்தர்கள் தாங்கள் நினைத்த காரியம் நிறைவேற வெற்றிலை மாலை சாத்தி வழிபாடு செய்வதோடு மட்டுமல்லாமல் அனுமானின் வாலில் பொட்டு வைத்து வணங்குவதும், அந்தப் பொட்டினை தொடர்ந்து 48 நாட்கள் வரை வைத்து அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றும்படி ஹனுமாரிடம் வேண்டுவது என்பது ஐதீகமாகவே உள்ளது என்று கூறலாம்.
எனவே நினைத்த காரியம் வெற்றி அடைய 48 நாட்கள் மட்டுமே போதுமானது. நீங்களும் ஹனுமாவின் வாலில் பொட்டு வைத்து 48 நாட்கள் இதை தொடர்ந்து செய்யும்போது உங்களுக்கும் அந்த பலன் கிடைக்கும்.
எனவே நீங்களும் திருநெல்வேலி சீமைக்கு சென்றால் அங்கே இருக்கும் இந்த கெட் வெல் ஆஞ்சநேயரை தவறாமல் தரிசியுங்கள். உங்களுக்கும் நல்ல பலன்களை தருவார் நம்பிக்கையோடு செல்லுங்கள்.