அவரு ஓரினச்சேர்க்கையாளர்.. சமந்தா விவாகரத்து குறித்து ஸ்ரீரெட்டி கூறிய பகீர் தகவல்..!

 ஸ்ரீரெட்டி : நடிகை சமந்தா மற்றும் நாகசைதன்யா ஆகிய வரும் விவாகரத்தை அறிவித்த பிறகு என்ன காரணத்திற்காக பிரிந்தார்கள் என்ற எந்த காரணத்தையும் அவர்கள் கூறவில்லை. இதனால் ஊடகங்கள் தங்களுடைய யூகத்தின் அடிப்படையில் பல கதைகளை பிரசுரித்து வந்தன.

மட்டுமில்லாமல் இணையவாசிகளின் வாட்ஸப் ஜர்னலிஸ்ட்டுகள் என ஆளாளுக்கு ஒரு காரணத்தை சமூகவலைதளங்களில் பறக்க விட்டுக் கொண்டிருந்தனர். இந்நிலையில் சர்ச்சை நடிகை என்று அடையாளம் காணப்படும் ஸ்ரீரெட்டி, சமந்தா-நாகசைதன்யா பிரிவு குறித்து பரபரப்பு தகவல் ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

இது ரசிகர்களை மிகவும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. தென்னிந்தியாவின் பிரபல நட்சத்திர ஜோடியாக இருந்தவர்கள் சமந்தா நாக சைதன்யா மூன்றாண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்த இவர்கள் இரண்டு வருடம் திருமணம் செய்யாமலேயே குடும்பம் நடத்தி வந்தனர் என்றும் தகவல்கள் வெளியானது.

தொடர்ந்து இரு வீட்டார் சம்மதத்துடன் பல கோடிகள் செலவழித்து அரசியல் பிரபலங்கள் சினிமா பிரபலங்கள் என அழைத்து பிரம்மாண்டமான முறையில் தங்களுடைய திருமணத்தை நடத்தினார்கள் நடிகை சமந்தா நாக சைதன்யா ஜோடி.

இந்நிலையில் நடிகை சமந்தாவின் விவாகரத்திற்கு முக்கியமான காரணம் நடிகை சமந்தாவின் ஒப்பனைக் கலைஞராக பணியாற்றி வந்த ப்ரீத்தம் ஜுகல்கர் என்பவருடன் நடிகை சமந்தா காட்டிய நெருக்கம் தான் அவரை விவாகரத்து வரை கொண்டு சென்று விட்டது என்று பலரும் கூறினார்கள்.

மேலும் நடிகை சமந்தா தன்னுடைய கர்ப்பத்தை கலைத்து விட்டதாகவும் சில தகவல்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆனது. இதனை கண்டு கொதிப்படைந்த நடிகை சமந்தா ப்ரீத்தம் ஜூகல்கர் என்னுடைய சகோதரர் போன்றவர்.

அவருடைய பெயரையும் என்னுடைய பெயரையும் கெடுக்கும் விதமான இப்படியான தகவல்களை பரப்புபவர்கள் மீது கண்டிப்பாக நான் புகார் கொடுப்பேன் இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள் என்பது போல ஒரு பதில் கொடுத்திருந்தார் நடிகை சமந்தா.

அதன் பிறகு இந்த விவகாரம் அடங்கிப்போனது. இந்நிலையில், சர்ச்சைக்கு பெயர் போன நடிகை ஸ்ரீ ரெட்டி நடிகை சமந்தாவும் ப்ரீத்தம் ஜுகல்கரும் தொடர்பில் இருந்திருக்க வாய்ப்பே கிடையாது.

காரணம், ப்ரீத்தம் ஒரு ஓரினச்சேர்க்கையாளர். எனவே கண்டிப்பாக அவர் சமந்தாவின் விவாகரத்திற்கு காரணமாக இருக்க மாட்டார். ஒரு வேளை திருமணத்திற்கு பிறகும் ஓவர் கிளாமரான படுக்கையறை காட்சிகளில் நடிகை சமந்தா நடித்தது அவருடைய விவாகரத்திற்கு காரணமாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்.

இதை தவிர வேறு எதுவும் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து நான் பேச விரும்பவில்லை. அது சரியாகவும் இருக்காது என்று கூறியிருக்கிறார் நடிகை ஸ்ரீரெட்டி. இந்த விவகாரம் தற்போது இணையத்தில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …